Skip to main content

தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு“

“தஞ்சை வீணைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது,” என, அறிவிசார் சொத்துரிமை சங்க தலைவர் சஞ்சய்காந்தி கூறினார். 
கர்நாடக இசை உலகில் உன்னதமான இடத்தைப்பெற்றது தஞ்சாவூர் வீணை. தஞ்சையில் 17ம் நுற்றாண்டில் ரகுநாத மன்னர் ஆட்சி காலத்தில் புதிய முறையில் வீணை தயார் செய்யப்பட்டது.இதனால், தஞ்சாவூர் வீணை
என்றும், ரகு நாதவீணை என்றும் பெயர் பெற்றது. 40 ஆண்டு விளைந்த பலா மரத்தின் அடி மரத்தில் இருந்து வீணை செய்யப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த, தஞ்சாவூர் வீணைக்கு, புவிசார் குறியீடு பெறப்பட்டுஉள்ளது.தஞ்சாவூரில் அறிவுசார் சொத்துரிமை பேரவை தலைவர் சஞ்சய்காந்தி கூறியதாவது. கலைஞர்களையும், பாரம்பரிய கலையையும் பாதுகாக்கத்தான், அரசுஇந்த புவிசார் குறியீட்டை வழங்குகிறது.

அதன்படி, தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. துவக்கத்தில் ஒவ்வொரு ராகங்களுக்கும்ஒரு வீணை பயன்படுத்தப்பட்டு வந்தது. பின், 17ம் நூற்றாண்டில், தஞ்சைஆண்ட ரகுநாத மன்னர் ஆட்சியின் போது, அனைத்து ராகங்களும் இசைக்க கூடிய வகையில் ஒரு வீணை தயாரிக்கப்பட்டது. தற்போது, நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள், தஞ்சாவூர் வீணை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், பல்வேறு கைவினை மற்றும் பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், தஞ்சை நெல் மாலை, தஞ்சை சீரகசம்பா, கும்பகோணம் வெற்றிலை, திருபுவனம் பட்டு, திருவையாறு அசோக அல்வா, தஞ்சை மரக்குதிரை, தஞ்சை ஓவியம் ஆகியவற்றுக்கும்புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்