Skip to main content

பள்ளிகளில் மழை நீர் சேமிப்பு தொட்டி அவசியம்

மழை நீர் சேமிப்பு தொட்டி அவசியம் : தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

ஜூன் 30க்குள் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து, அதன் பயன்களை மாணவர்களிடம் எடுத்துக்கூற வேண்டும். இதுகுறித்து போட்டோவுடன் ஆவணத்தை, ஒவ்வொரு பள்ளியும், அரசிடம் தனித்தனியே சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.காற்றழுத்த தாழ்வு மண்டலம், வெப்ப சுழற்சி உள்ளிட்டவற்றால், மழை பெய்திருந்தாலும், பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாமல் போவதால், ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே இருக்கிறது. இதுதொடர்பாக, மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, மெட்ரிக் என அனைத்து வகையான பள்ளிகளும், ஜூன் 30க்குள் தங்கள் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும். மழை பெய்யும்போது, மொத்த நீரும் அதில் சேகரமாகும் வகையில் ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.பொதுப்பணி, குடிநீர் வடிகால் வாரியம், வேளாண் துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து மழைநீர் சேகரிப்பு குறித்து ஆய்வு கூட்டம், ஓவியம் மற்றும் கட்டுரை போட்டி மாணவர்களுக்கு நடத்த வேண்டும்; தினமும் பள்ளியின் கரும்பலகையில் மழைநீர் சேமிப்பை வலியுறுத்தி, ஏதேனும் ஒரு கருத்து எழுதி போட வேண்டும்; இறைவணக்க
கூட்டங்களில் மாணவர்களிடம் இதுகுறித்து அறிவுறுத்த வேண்டும்.பள்ளியில் மழைநீர் தொட்டி அமைத்தது; மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது; போட்டி நடத்தியது குறித்து, வரும் ஜூன் 30க்குள் போட்டோவுடன் அரசுக்கு ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும். சிறந்த பள்ளியை தேர்ந்தெடுத்து, பரிசு வழங்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர் மூலம், இந்த உத்தரவு, தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு