Skip to main content

ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீடு அட்டை பெற வழிமுறைகள்

ஓய்வூதியர்கள், புதிய மருத்துவ திட்டத்திற்கு, ஜூன் 30க்குள், விபரங்களை படிவத்தில் தெரிவித்து, அடையாள அட்டை (ஐ.டி., கார்டு) பெறலாம்,' என,
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியருக்கான புதிய மருத்துவ திட்டம் வரும் ஜூலை முதல் அமலாகவுள்ளது. இதுவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேரும் ஓய்வூதியர்கள், செலவு செய்தபின், பில்களை, ஓய்வூதிய இயக்குனருக்கு அனுப்பி, சிகிச்சை செலவை பெறுகின்றனர். இனி அவர்கள் சிகிச்சைக்கு சேரும்போதே, அதற்கான அடையாள அட்டையை காட்டி பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறலாம். இதற்காக அவர்கள் புதிய அடையாள அட்டையை பெற வேண்டும். இதைப் பெற, ஒரு படிவத்தை பூர்த்தி செய்து, கருவூலத்தில் வழங்க வேண்டும். இப்படிவத்தில், ஓய்வூதிய கொடுப்பாணை எண், ஓய்வூதியரின் கணவர் அல்லது மனைவி பெயர் விபரம் தரவேண்டும். அவர் ஏற்கனவே அரசு ஊழியராக இருப்பின், அவரது மருத்துவ கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும். கணவரோ அல்லது மனைவியோ ஓய்வூதியராக இருப்பின், அதன் விபரங்களை குறிப்பிட வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான பிரிமியத் தொகையை, கணவர் அல்லது மனைவியில், யாரிடம் பிடித்தம் செய்வது என குறிப்பிட வேண்டும். ஓய்வூதியர் குடும்ப ஓய்வூதியராக இருந்தால், அதை எந்த வங்கியில் பெறுகிறார் என தெரிவிக்க வேண்டும். ஒருவர் 2 குடும்ப ஓய்வூதியம் பெற்றால், எந்த ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என தெரிவிக்க வேண்டும். இவ்விபரங்களை ஜூன் 30க்குள் படிவத்தில் பூர்த்தி செய்து வழங்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு