ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யும் தேதி ஜூன் 6 வரை நீட்டிப்பு
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் வேலைவாய்ப்புக்காக ஆன்-லைனில் பதிவு செய்யும் தேதி ஜூன் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித் துறை
அறிவித்துள்ளது.
ஜூன் 6 வரை பதிவு செய்யும் மாணவர்களுக்கு ஒரே பதிவு மூப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 21-ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து மே 21 முதல் மே 30-ஆம் தேதி வரை பள்ளிகளின் மூலமாக ஆன்-லைனில் மாணவர்கள் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த தேதிகளில் பதிவு செய்யும் மாணவர்களுக்கு ஒரே பதிவு மூப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதுவரை 4.30 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புக்காக ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர். மாணவர்களின் நலன் கருதி பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.