Skip to main content

பாரத ஸ்டேட் வங்கியில் 5,092 பணியிடங்கள்

பாரத ஸ்டேட் வங்கியில் நாடு முழுவது முள்ள 5 ஆயிரத்து 92 எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வந்திருக்கிறது. இதற்கான தேர்வு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடக்கவிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 373 காலிப்பணியிடங்கள் இந்தத் தேர்வு மூலம்
நிரப்பப்படும். இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை நிரப்ப றறற.ளbi.உடி.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 26 ஆம் தேதியன்றே நிரப்புவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டு விட்டது. ஜூன் மாதம் 14 ஆம் தேதி விண்ணப்பங்களை நிரப்புவதற்கான கடைசித் தேதியாகும்.

18 வயதை நிரம்பியவர்கள் விண்ணப் பத்தை நிரப்பலாம். பொதுவாக, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என் றிருந்த நிலையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு, பட்டப்படிப்பில் கடைசி ஆண்டில் இருப்பவ ரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட் டிருக்கிறது. பொதுப்பிரிவில் உள்ளவர்களுக்கான வயது வரம்பு 18 வயது முதல் 28 வயது வரை என்றும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 18 முதல் 31 வரை என்றும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 18 முதல் 33 வரை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிற்படுததப்பட்ட பிரிவினருக்கு ரூ. 450 என்று தேர்வுக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு