Skip to main content

இன்று மே 31

மே 31

நிகழ்வுகள்

1223 - செங்க்கிஸ் கானின் மங்கோலியப் படைகள் கிப்சாக்கியரை சமரில் தோற்கடித்தனர்.

1889 - பென்சில்வேனியாவில் ஜோன்ஸ்டவுன் நகரில் அணைக்கட்டு ஒன்று
உடைந்ததில் 2,200 பேர் கொல்லப்பட்டனர்.

1900 - பிரித்தானியப் படைகள் ரொபேர்ட் பிரபு தலைமையில் ஜோகார்னஸ்பேக் நகரைக் கைப்பற்றின.

1902 - தென்னாபிரிக்காவில் இரண்டாவது போவர் போர் முடிவுற்றது. தென்னாபிரிக்கா பிரித்தானியாவின் முழுமையான ஆட்சியின் கீழ் வந்தது.

1910 - தென்னாபிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது.

1911 - டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1921 - ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லஹோமா, துல்சா என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களின் போது 39 பேர் கொல்லப்பட்டனர்.

1931 - பாகிஸ்தானின் குவெட்டா என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 40,000 பேர் கொல்லப்பட்டனர்.

1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள் சிட்னி நகரைத் தாக்கின.

1961 - தென்னாபிரிக்கா பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகியது. தென்னாபிரிக்கக் குடியரசு அமைக்கப்பட்டது.

1962 - மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.

1970 - பெருவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் யூங்கே என்ற நகர் முழுமையாகப் புதையுண்டதில் 47,000 பேர் கொல்லப்பட்டனர்.

1997 - கனடாவில் நியூ பிரன்ஸ்விக்கையும் பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் இணைக்கும் கூட்டமைப்புப் பாலம் (Confederation Bridge) திறக்கப்பட்டது.

1981 - யாழ்ப்பாணம் பொது நூலகம் நள்ளிரவு நேரம் இலங்கை காவல் துறையினரால் எரிக்கப்பட்டது.

2004 - வீரகேசரி பத்திரிகை நிருபரும் பத்திரிகையாளருமான ஐயாத்துரை நடேசன் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2005 - இலங்கையின் புலனாய்வுத்துறை உயர் அதிகாரி மேஐர் நிசாம் முத்தாலிப் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2007 - டொராண்டோ தமிழியல் மாநாடு ஆரம்பமானது.

பிறப்புகள்

1048 - ஓமர் கையாம், பேர்சிய மெய்யியலாளர் (இ. 1131)

1911 - கே. சி. எஸ். பணிக்கர், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓவியர், (இ. 1977)

1931 - நீலாவணன், ஈழத்துக் கவிஞர் (இ. 1975)

இறப்புகள்

1809 - ஜோசப் ஹேடன், மேற்கத்திய இசையறிஞர் (பி. 1732)

1832 - கால்வா, பிரெஞ்சு கணிதவியலர் (பி. 1811)

1987 - ஜான் ஆபிரகாம், திரைப்பட இயக்குநர் (பி. 19937)

2004 - ஐயாத்துரை நடேசன், ஈழத்துப் பத்திரிகையாளர்

சிறப்பு நாள்

புகையிலை எதிர்ப்பு நாள்

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்