Skip to main content

எம்பிஏ, எம்சிஏ சேர 2ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்

தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அண்ணா பல்கலைக் கழக வட்டார வள மையங்கள், சென்னை பல்கலைக் கழகம், பெரியார் பல்கலைக் கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், அன்னை தெரசா
மகளிர் பல்கலைக் கழகம், தனியார் பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ ஆகியவற்றில் முதுநிலை பட்டப் படிப்பில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடக்க இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 2ம் தேதி முதல் 30ம் தேதிவரை வழங்கப்பட உள்ளன. விண்ணப்பங்களை நேரடியாக பெற விரும்புவோர் 300க்கு, செயலாளர், தமிழ்நாடு எம்பிஏ, எம்சிஏ சேர்க்கை 2014, அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோவை&641013 என்ற பெயரில் டிடி எடுத்து கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மேற்கண்ட முகவரிக்கு ஜூன் 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். எம்பிஏ, எம்சிஏ முதுநிலை பட்டப் படிப்புக்கான கவுன்சலிங் ஜூலை 3வது வாரத்தில் கோவையில் நடக்கும். இதற்கான அழைப்புக் கடிதங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு