Skip to main content

பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள்: மே 27 முதல் வழங்க ஏற்பாடு.

தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு மே 27 முதல் வழங்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 ல் வெளியிடப்பட்டது. இதில் விடைத்தாள் நகல் கேட்டும், மறு கூட்டல் கேட்டும் மாணவர்கள்
தேர்வுத்துறைக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் விடைத்தாள் நகல் கேட்டு 87 ஆயிரம் பேரும் மறு கூட்டல் கேட்டு 4 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.இந்த பணிகளுக்காக பணியாளர் தொகுதி இணை இயக்குனர் கருப்பசாமி தலைமையிலும், மதுரை முதன்மை கல்வி அதிகாரி அமுதாராணி கண்காணிப்பில், 200 பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இவர்கள் 95 சதவீத பணிகள் நிறவு செய்துள்ளனர். இந்நிலையில் மாணவர்களுக்கு விடைத்தாள் நகல்களை மே 27 முதல் வழங்க தேர்வுத்துறை ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்து வருகிறது.மறு கூட்டல் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளது. விரைவில் பணிகள் முடித்து மாணவர்களுக்கு மே 27 முதல் வழங்கப்படும், என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா