Skip to main content

வீடுகளுக்கான இணையதள வாடகை ஜூன் 1 முதல் உயர்வு

தொலைபேசிகளுடன் கூடிய, அகன்ற அலைவரிசை இணையதள சேவை பெறும் திட்டங்களின் மாதாந்திர வாடகை ஜூன் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படும் என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை பிஎஸ்என்எல் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தொலைபேசிகளுடன்
கூடிய வீடுகளுக்கான அகன்ற அலைவரிசை இணையதள சேவைக்கு, இப்போது வசூலிக்கப்படும் மாத வாடகை 525 ரூபாய், ஜூன் ஒன்றாம் தேதி முதல் 545 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மேலும் ஓராண்டுக்கான வாடகையை மொத்தமாக செலுத்தினால் 5995 ரூபாயாகவும், 2 ஆண்டுகளுக்கான வாடகை 11,445 ரூபாயாகவும், 3 ஆண்டுகளுக்கான வாடகை 16,350 ரூபாயாகவும் வசூலிக்கப்படும்.

இதேபோல் தொலைபேசிகளுடன் கூடிய வீடுகளுக்கான அகன்ற அலைவரிசை இணையதள சேவைக்கு இப்போது வசூலிக்கப்படும் மாத வாடகை 650 ரூபாய் ஜூன் ஒன்றாம் தேதி முதல் 675 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மேலும் ஓராண்டுக்கான வாடகையை மொத்தமாக செலுத்தினால் 7,425 ரூபாயாகவும், 2 ஆண்டுகளுக்கான வாடகை 14,175 ரூபாயாகவும், 3 ஆண்டுகளுக்கான வாடகை 20,250 ரூபாயாகவும் வசூலிக்கப்படும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா