Skip to main content

வீடுகளுக்கான இணையதள வாடகை ஜூன் 1 முதல் உயர்வு

தொலைபேசிகளுடன் கூடிய, அகன்ற அலைவரிசை இணையதள சேவை பெறும் திட்டங்களின் மாதாந்திர வாடகை ஜூன் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படும் என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை பிஎஸ்என்எல் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தொலைபேசிகளுடன்
கூடிய வீடுகளுக்கான அகன்ற அலைவரிசை இணையதள சேவைக்கு, இப்போது வசூலிக்கப்படும் மாத வாடகை 525 ரூபாய், ஜூன் ஒன்றாம் தேதி முதல் 545 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மேலும் ஓராண்டுக்கான வாடகையை மொத்தமாக செலுத்தினால் 5995 ரூபாயாகவும், 2 ஆண்டுகளுக்கான வாடகை 11,445 ரூபாயாகவும், 3 ஆண்டுகளுக்கான வாடகை 16,350 ரூபாயாகவும் வசூலிக்கப்படும்.

இதேபோல் தொலைபேசிகளுடன் கூடிய வீடுகளுக்கான அகன்ற அலைவரிசை இணையதள சேவைக்கு இப்போது வசூலிக்கப்படும் மாத வாடகை 650 ரூபாய் ஜூன் ஒன்றாம் தேதி முதல் 675 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மேலும் ஓராண்டுக்கான வாடகையை மொத்தமாக செலுத்தினால் 7,425 ரூபாயாகவும், 2 ஆண்டுகளுக்கான வாடகை 14,175 ரூபாயாகவும், 3 ஆண்டுகளுக்கான வாடகை 20,250 ரூபாயாகவும் வசூலிக்கப்படும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு