Skip to main content

தமிழக அரசு உத்தரவு: 13 அரசு கலைக் கல்லூரிகள் தரம் உயர்வு

தமிழக அரசு உத்தரவு: 13 அரசு கலைக் கல்லூரிகள் கிரேடு 1 ஆக தரம் உயர்வு.
தமிழகத்தில் 13 அரசுக் கலைக்கல்லூரிகள் கிரேடு 1 அந்தஸ்துக்கு தரம்உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 7 பிஎட் அரசுக் கல்லூரிகள் மற்றும் 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. கடந்த ஆண்டு கோவில்பட்டி, சிவகாசி உள்ளிட்ட மேலும் 12 அரசுக் கலைக்
கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தற்போது, 74 அரசு கலைக் கல்லூரிகளும், 7 பிஎட் அரசுக் கல்லூரிகளும் உள்ளன. இந்தக் கல்லூரிகளின் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை, உயர்கல்வி வசதி உள்ளிட்ட பல்வேறு தகுதிகளின் அடிப்படையில், கிரேடு 1 மற்றும் கிரேடு 2 என்ற தகுதியை அரசு வழங்கி வருகிறது.ஏற்கனவே 23 கல்லூரிகள் கிரேடு 1 தகுதியை பெற்றுள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டு மேலும் 13 கல்லூரிகள் கிரேடு 2ல் இருந்து கிரேடு 1 அந்தஸ்தை பெற்றுள்ளதாக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக்கல்லூரிகள் பட்டியல்வருமாறு: வாலாஜா, குடியாத்தம், விழுப்புரம், கடலூர், விருத்தாச்சலம், அரியலூர்,திருப்பூர் எல்ஆர்ஜி அரசு கல்லூரி, திருப்பூர் சிக்கன்னா கலைக்கல்லூரி, உடுமலைப்பேட்டை, நாமக்கல் பெண்கள் கல்லூரி, சேலம், மன்னார்குடி, சிவகங்கை ஆண்கள் கலைக்கல்லூரி ஆகியவை புதிய கல்வி ஆண்டு முதல் கிரேடு 1 கல்லூரியாக தகுதி உயர்வு பெற்றுள்ளன.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு