Skip to main content

தமிழக அரசு உத்தரவு: 13 அரசு கலைக் கல்லூரிகள் தரம் உயர்வு

தமிழக அரசு உத்தரவு: 13 அரசு கலைக் கல்லூரிகள் கிரேடு 1 ஆக தரம் உயர்வு.
தமிழகத்தில் 13 அரசுக் கலைக்கல்லூரிகள் கிரேடு 1 அந்தஸ்துக்கு தரம்உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 7 பிஎட் அரசுக் கல்லூரிகள் மற்றும் 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. கடந்த ஆண்டு கோவில்பட்டி, சிவகாசி உள்ளிட்ட மேலும் 12 அரசுக் கலைக்
கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தற்போது, 74 அரசு கலைக் கல்லூரிகளும், 7 பிஎட் அரசுக் கல்லூரிகளும் உள்ளன. இந்தக் கல்லூரிகளின் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை, உயர்கல்வி வசதி உள்ளிட்ட பல்வேறு தகுதிகளின் அடிப்படையில், கிரேடு 1 மற்றும் கிரேடு 2 என்ற தகுதியை அரசு வழங்கி வருகிறது.ஏற்கனவே 23 கல்லூரிகள் கிரேடு 1 தகுதியை பெற்றுள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டு மேலும் 13 கல்லூரிகள் கிரேடு 2ல் இருந்து கிரேடு 1 அந்தஸ்தை பெற்றுள்ளதாக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக்கல்லூரிகள் பட்டியல்வருமாறு: வாலாஜா, குடியாத்தம், விழுப்புரம், கடலூர், விருத்தாச்சலம், அரியலூர்,திருப்பூர் எல்ஆர்ஜி அரசு கல்லூரி, திருப்பூர் சிக்கன்னா கலைக்கல்லூரி, உடுமலைப்பேட்டை, நாமக்கல் பெண்கள் கல்லூரி, சேலம், மன்னார்குடி, சிவகங்கை ஆண்கள் கலைக்கல்லூரி ஆகியவை புதிய கல்வி ஆண்டு முதல் கிரேடு 1 கல்லூரியாக தகுதி உயர்வு பெற்றுள்ளன.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்