Skip to main content

10ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இந்த ஆண்டே உயர்கல்வியை தொடர வசதியாக நடத்தப்பட உள்ள உடனடி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. 
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் கடந்த 23ம் தேதி வெளியானது. இதில் 91.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள்
உடனடியாக தேர்வு எழுதி வெற்றி பெற்றால் இந்த ஆண்டே தங்களது உயர்கல்வியை தொடர முடியும். இதற்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் இறுதியில் நடைபெற உள்ளது. துணைத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள், அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை தேர்வுக் கட்டணமாக ரூ.125 செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இது தவிர கூடுதலாக ரூ.50ஐ பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கென தனியாக விண்ணப்பம் எதுவும் கிடையாது என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா