அரசுக்குச் சொந்தமான பல்லவன் கிராம வங்கியில் 54 அதிகாரிகள் மற்றும் 52 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகி யுள்ளது. 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடந்த கிராம வங்கிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் இதற்கு
விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த நேர்முகத் தேர்வு சேலத்தில் உள்ள தலைமையகத்தில் நடைபெறும்.
இதில் 30 மதிப்பெண்கள் வழங்கப்படும. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்களை இணைத்து வெற்றி பெற்றவர்கள் தீர்மானிக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் இதற்கான கூடுதல் விபரங்களை www.ibps.in அல்லது www.pallavangramabank.in என்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வது மே 26 அன்று துவங்கிவிட்டது. பதிவு செய்து கொள்வதற்கான கடைசி நாள் ஜூன் 10 ஆம் தேதி ஆகும்.