Skip to main content

பல்லவன் கிராம வங்கியில் 104 பணியிடங்கள்

அரசுக்குச் சொந்தமான பல்லவன் கிராம வங்கியில் 54 அதிகாரிகள் மற்றும் 52 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகி யுள்ளது. 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடந்த கிராம வங்கிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் இதற்கு
விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த நேர்முகத் தேர்வு சேலத்தில் உள்ள தலைமையகத்தில் நடைபெறும்.

இதில் 30 மதிப்பெண்கள் வழங்கப்படும. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்களை இணைத்து வெற்றி பெற்றவர்கள் தீர்மானிக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் இதற்கான கூடுதல் விபரங்களை www.ibps.in அல்லது www.pallavangramabank.in என்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வது மே 26 அன்று துவங்கிவிட்டது. பதிவு செய்து கொள்வதற்கான கடைசி நாள் ஜூன் 10 ஆம் தேதி ஆகும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு