Skip to main content

பல்லவன் கிராம வங்கியில் 104 பணியிடங்கள்

அரசுக்குச் சொந்தமான பல்லவன் கிராம வங்கியில் 54 அதிகாரிகள் மற்றும் 52 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகி யுள்ளது. 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடந்த கிராம வங்கிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் இதற்கு
விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த நேர்முகத் தேர்வு சேலத்தில் உள்ள தலைமையகத்தில் நடைபெறும்.

இதில் 30 மதிப்பெண்கள் வழங்கப்படும. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்களை இணைத்து வெற்றி பெற்றவர்கள் தீர்மானிக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் இதற்கான கூடுதல் விபரங்களை www.ibps.in அல்லது www.pallavangramabank.in என்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வது மே 26 அன்று துவங்கிவிட்டது. பதிவு செய்து கொள்வதற்கான கடைசி நாள் ஜூன் 10 ஆம் தேதி ஆகும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா