Skip to main content

மீண்டும் உயிர் பெறுகிறது இரட்டைப்பட்டம் வழக்கு

மீண்டும் உயிர் பெறுகிறது இரட்டைப்பட்டம் வழக்கு. மே-2ல் உச்சநீதி மன்றத்தில் தாக்கல்

இரட்டைப்பட்டம் செல்லாது என சென்னை உயர்நீதி மன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இரட்டைப்பட்டம் பயின்றவர்கள் நாட்டின் கடைசி நீதி
மன்றமான உச்ச நீதி மன்றத்தை நாடியுள்ளார்கள்.
இது சம்பந்தமாக வழக்கினை மே-2ல் தாக்கல் செய்ய உள்ளனர். இதில் சிறப்பு விடுவிப்பு மனுவினை தாக்கல் செய்ய உள்ளனர். தங்களுக்கு நீதி கிடைக்கும் வரைதாங்கள் ஓயப் போவதில்லை எனவும் சூளுரைத்தனர். மேலும் நாங்கள் யார் பதவி உயர்வையும் கெடுக்க நினைக்க வில்லை. எங்களுக்கு பறிபோன பதவி உயர்விற்காகவும், நாங்கள் படித்த படிப்பினை மதிப்புள்ளதகவும் மாற்றவே நாங்கள் சட்ட ரீதியான முயற்சியினை மேற்கொண்டுள்ளோம் என அவ்வழக்கின் பெறுப்பாளர்கள் தெரிவித்தனர். 

தங்களைப்பற்றி அவதூறு செய்திகள் பரப்புவர்களுக்கு உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு சரியான பதிலடியாக இருக்கும் என நம்மிடம் தெரிவித்தனர். தேர்தல் முடிவிற்கு பின்னால் பொது மாறுதல் கலந்தாய்வு நடக்க இருக்கும் சூழலில் இவ்வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா