இந்தியாவுக்கான புதிய இலங்கை தூதராக சுதர்சன் சேனேவீரத்னே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே இந்த பதவியை வகித்த கரியவாசல், அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சுதர்சன்
சேனேவீரத்னேவுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரதேனியா பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத் தலைவராக பதவி வகித்து வந்த சுதர்சன், இலங்கையின் பாரம்பரியச் சின்னங்களை காக்கும் பணியை செய்துவந்தார். அத்துறைில் அவர் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக, அமெரிக்க தொல்லியல் கழகத்தின் 2013-ஆம் ஆண்டுக்கான பாரம்பரிய மேலாண்மை விருதைப் பெற்றுள்ளார்.
தற்போது அயல் நாட்டு பணிக்கு அரசால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இலைங்கை நாடாளுமன்றத்தின் உயர் பதவி நியமனக் குழுவின் அனுமதி கிடைத்தால்தான், அவர் இந்த பதவியை ஏற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.thinaboomi.com/2014/04/19/33275.html