Skip to main content

ஓட்டு போடுவது எப்படி?

ஓட்டு போடுவது எப்படி என, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம், செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.அதன் விவரம்:
*தேர்தல் அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும், 'பூத் சிலிப்'பில், வேட்பாளரின் ஓட்டுச் சாவடி எண், ஓட்டு போடும் மையம் குறிப்பிடப்பட்டிருக்கும். இதை, தேர்தல் கமிஷன், இணையதளத்திலும்
தெரிந்து கொள்ளலாம்.
*ஓட்டு போடும் மையத்திற்கு செல்லும் போது, ஏதாவது ஒரு அடையாள அட்டையையும், பூத் சிலிப்பையும் கொண்டு செல்ல மறக்கக் கூடாது.
*ஓட்டுச் சாவடிகளுக்கு, மொபைல் போன் எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
*தனியார் வாகனங்கள், ஓட்டுச்சாவடிக்கு, 200 மீட்டர் தூரத்தில் நிறுத்த வேண்டும்.
*முதல் தேர்தல் அலுவலர், வாக்காளரின் அடையாள அட்டையை சரி பார்த்து, உரத்த குரலில் படிப்பார். அதை ஓட்டுச் சாவடிக்குள் உள்ள அனைத்து கட்சி ஏஜன்ட்களும் உறுதி செய்வர்.
*இரண்டாவது அலுவலர், வாக்காளரின் இடது ஆள் காட்டி விரலில், அடையாள மையிட்டு, ஓட்டளிக்கும் சிலிப் வழங்கி, வாக்காளர் எண்ணைப் பதிவு செய்வார். இதில் வாக்காளரும் கையெழுத்திட வேண்டும்.
*அடுத்ததாக, வாக்காளர் மூன்றாம் அலுவலரிடம், ஓட்டு பதிவிற்கான சிலிப்பை காண்பிக்க வேண்டும். அவர் ஓட்டளிக்கும் இயந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள, 'பேலட் பட்டனை' அழுத்துவார். பின் வாக்காளர், ஓட்டு போடும் மறைவிடத்திற்கு சென்று, ஓட்டை இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும்.
*ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஒவ்வொரு வேட்பாளருக்கும் சின்னம் மற்றும் பெயருக்கு எதிரே நீல நிறத்தில் பொத்தான் கொடுக்கப்பட்டிருக்கும். யாருக்கும் ஓட்டுப்போட விருப்பம் இல்லாவிட்டால், நோட்டா' என்ற பட்டனை அழுத்தலாம்.
*வாக்காளர் ஏதாவது ஒரு பொத்தான் மட்டும் பயன்படுத்தி, ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.
*நீல பட்டன் பயன்படுத்தும்போது, நீங்கள் ஓட்டளித்த வேட்பாளரின் பெயருக்கு எதிரே, சிகப்பு விளக்கு எரியும்; ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட பிறகு, 'பீப்' ஒலி கேட்கும். இயந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள விளக்கு, அணைந்து விடும். ஓட்டளிக்கும் முறை, இத்துடன் முடிவடையும்.
இவ்வாறு, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்