Skip to main content

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்காக மே இரண்டாவது வாரத்தில் விண்ணப்பம் வினியோகிக்கப்படலாம் என என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ். படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்காக, மே இரண்டாவது வாரத்தில், விண்ணப்பம் வினியோகிக்கப்படலாம்' என, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15
சதவீதம் போக, மாநில ஒதுக்கீட்டில், 2,172 இடங்கள் உள்ளன. இவை, இடஒதுக்கீடு அடிப்படையில், கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதுதவிர, தமிழகத்தில் உள்ள, 13 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பிக்கும், 950 அரசு ஒதுக்கீடு, எம்.பி.பி.எஸ்., இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, ஒரே விண்ணப்பம் தான் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 9ல் வெளியாக உள்ளது. இதையொட்டி, இந்த கல்வி ஆண்டுக்கான விண்ணப்ப வினியோகம், மே இரண்டாவது வாரத்தில் துவங்கும் என, தெரிகிறது. "விண்ணப்பக் கட்டணம், வினியோக தேதி உள்ளிட்ட முழு விவரங்கள், விரைவில் வெளியிடப்படும்' என, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா