Skip to main content

உச்சநீதிமன்றத்தில் இரட்டைப்பட்ட வழக்கு.

2012-ஆம் ஆண்டு ஆரம்பித்த வழக்கு முடிவடைந்தவிட்டது என்று எண்ணியநேரம் மீண்டும் ஆரம்பமாகி உள்ளது.
ஓராண்டு பட்டம் பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வில் மாண்புமிகு நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அம்மனு மீதான விசாரணை
வருகிற மே 2 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது .

அந்த மனுவில் கூறியுள்ளதாவது.

1) 01.01.2012 முதல் தங்களுக்குறிய Seniority -ஐ வழங்க வேண்டும்

2) 01.01.2012 Panel-லின் மூலம் பதவியுயர்வு பெற்றவர்கள் (மூன்று வருட பட்டபடிப்பு) நிலையிறக்கம் செய்ய வேண்டும்

3) 01.01.2013 Panel-இல் ஓராண்டு பட்டம் பெற்றவர்களை Panel-ல் சேர்த்து பதவியுயர்வு வழங்க வேண்டும். 

அதுவரை பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வினை நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்டு உள்ளதாக தெரிய வருகிறது.எனவே 01.01.2012-Panel-ன் மூலம் பதவியுயர்வு பெற்றவர்களுக்கு நிலையிறக்கம் (கீழ் இறக்கம்) நிலை உருவாகி உள்ளது. 01.01.2013 Panel மற்றும் 01.01.2014 Panel-இல் இடம் பெற்றவர்களுக்கும் சிக்கல் உருவாகி உள்ளது. 

ஓராண்டு பட்டம் பெற்றவர்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இறுதி வெற்றி பெறுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்மென இரண்டு வருடங்களாக இந்த வழக்கை தொடர்ந்து நடத்துபவர்கள் விரும்புகின்றனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்