Skip to main content

அரசு கல்லூரி முதல்வர் பதவி: ஐகோர்ட் அறிவுரை.

அரசு சுற்றுலாத் துறையின், ஓட்டல் நிர்வாகம் மற்றும் கேட்டரிங்டெக்னாலஜி கல்லூரியில், துறைத் தலைவர் பதவியே இல்லாதபோது, 
அதில் அனுபவம்பெற்றவர்களைத் தான், முதல்வர் பதவியில் நியமிக்க முடியும் என்ற அரசின் உத்தரவு,விதிகளுக்கு புறம்பானது. துறைத் தலைவர் பதவியை, அரசு உருவாக்க வேண்டும் என,மதுரை ஐகோர்ட் கிளை, ஆலோசனை வழங்கி உள்ளது.பதவி உயர்வே இல்லை : திருச்சி
துவாக்குடியில், தமிழக அரசு சுற்றுலாத் துறையின், ஓட்டல் நிர்வாகம்கேட்டரிங் டெக்னாலஜி கல்லூரி உள்ளது. இங்கு பணிபுரியும் கார்த்திகேயன், பாஸ்கரன் தாக்கல் செய்த மனு:எங்களுக்கு போதிய கல்வித் தகுதி, பணி அனுபவம் உள்ளது. பல ஆண்டுகளாக, பதவி உயர்வு வழங்கவில்லை.முதல்வர் பணி நியமனம் தொடர்பாக, அரசு 2013ல் அறிவிப்பு வெளியிட்டது.இதில், எங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. பின், துறைத் தலைவர்களாக, ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம்இருந்தால் தான், முதல்வர் பதவிக்கு முன்னுரிமை வழங்க முடியும் என, உத்தரவிட்டனர். இதை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.




விதிமுறைக்கு புறம்பானது : மனுவை விசாரித்த, நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு பிறப்பித்த உத்தரவு:கல்லூரியில், துறைத் தலைவர் (எச்.ஓ.டி.,) பதவி என்பதே இல்லை. இந்நிலையில், தகுதியான ஒருவரை,எப்படிமுதல்வர் பதவிக்கு நியமிக்க முடியும்? அரசின் அறிவிப்பு, தேசிய ஓட்டல்நிர்வாகம் மற்றும் கேட்டரிங்டெக்னாலஜி கவுன்சில் விதிமுறைகளுக்கு புறம்பானது. துறைத் தலைவர் பதவியை உருவாக்க, சுற்றுலா,கலாசாரம் மற்றும்அறநிலையத் துறை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அறிவுறுத்துகிறேன்.அப்படிச் செய்தால் தான், அனுபவம் வாய்ந்தவர்கள், முதல்வர் பதவிக்கு வர முடியும். மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு