ஒருவருக்கொருவர் கதை சொல்லி மகிழ்வது என்பது மனித இனப் பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும், பரம்பரை பரம் பரையாக ஊறிப்போன ஒரு விஷயமாகும். குறிப்பாக, குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லி உணவு ஊட்டுவதும், உறங்கச் செய்வதும் நமக்குக் கை வந்த கலை. எழுத்து வடிவம்
, அச்சு வருவதற்கு முன்னாலேயே, கதை சொல்லி வந்தனர் நம் மக்கள். கதை சொல்லி வந்ததில்தான், நம் முன்னோர்களின் சரித்திரம் வாய்மொழி பதிவாக இருந்து வந்ததாக, ஆய்வாளர்கள் கூறுவார்கள்.
, அச்சு வருவதற்கு முன்னாலேயே, கதை சொல்லி வந்தனர் நம் மக்கள். கதை சொல்லி வந்ததில்தான், நம் முன்னோர்களின் சரித்திரம் வாய்மொழி பதிவாக இருந்து வந்ததாக, ஆய்வாளர்கள் கூறுவார்கள்.
கதை சொல்லும் ஆர்வம் உள்ளவர்களுக்காகவும், கதைகளைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்காகவும், இணையத்தில் http://www.shareastory.org/about என்ற முகவரியில் ஒரு தளம் இயங்குகிறது.
இந்த தளத்தில், About பக்கத்தில், இத்தளத்தின் நோக்கங்கள் என்ன என்பது குறித்து விளக்கம் காணப்படுகிறது. இவை தவிர, தளப் பக்கத்தில் Home, Stories, Contribute என்ற டேப்கள் தரப்பட்டுள்ளன. முதல் பக்கத்தில் (Home) அன்றைய கதை கிடைக்கும். சில வேளைகளில் கதைகள் இரண்டு பகுதிகளாக இங்கே இடம் பெறும். அப்போது, முதல் பகுதிக்கான லிங்க் அங்கே தரப்படும்.
மற்ற கதைகளுக்கு Stories டேப் அழுத்திச் செல்லலாம். இங்கு நாடுகள் வாரியாக, கதை வகைகளின் அடிப்படையில், கதைகள் தரப்பட்டுள்ளன. அனைத்தும் எளிமையான ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன.
உங்களுடைய கதையை நீங்கள் இங்கு பதிக்க வேண்டும் என்றால், Submit a Story என்ற பட்டனை அழுத்தி, கதைகள் அனுப்புவதற்கான வரையறைகளைக் காணலாம். எடுத்துக்காட்டாக, கதை ஒன்று, 1000 முதல் 1,400 சொற்களுக்குள்ளாகவே இருக்க வேண்டும். மேலும் இங்கு வரும் கதைகளைத் திருத்தி அமைக்கும் பணியினை, தன்னார்வ அடிப்படையில் நீங்கள் செய்து கொடுக்கலாம்.
இந்த தளம் சென்று பாருங்கள். உங்கள் கதை கேட்கும் ஆர்வமும், சொல்லும் ஆர்வமும் வளம் பெறும்.