Skip to main content

இணையதளம் கதை கேளு கதை கேளு

ஒருவருக்கொருவர் கதை சொல்லி மகிழ்வது என்பது மனித இனப் பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும், பரம்பரை பரம் பரையாக ஊறிப்போன ஒரு விஷயமாகும். குறிப்பாக, குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லி உணவு ஊட்டுவதும், உறங்கச் செய்வதும் நமக்குக் கை வந்த கலை. எழுத்து வடிவம்
, அச்சு வருவதற்கு முன்னாலேயே, கதை சொல்லி வந்தனர் நம் மக்கள். கதை சொல்லி வந்ததில்தான், நம் முன்னோர்களின் சரித்திரம் வாய்மொழி பதிவாக இருந்து வந்ததாக, ஆய்வாளர்கள் கூறுவார்கள்.
கதை சொல்லும் ஆர்வம் உள்ளவர்களுக்காகவும், கதைகளைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்காகவும், இணையத்தில் http://www.shareastory.org/about என்ற முகவரியில் ஒரு தளம் இயங்குகிறது. 
இந்த தளத்தில், About பக்கத்தில், இத்தளத்தின் நோக்கங்கள் என்ன என்பது குறித்து விளக்கம் காணப்படுகிறது. இவை தவிர, தளப் பக்கத்தில் Home, Stories, Contribute என்ற டேப்கள் தரப்பட்டுள்ளன. முதல் பக்கத்தில் (Home) அன்றைய கதை கிடைக்கும். சில வேளைகளில் கதைகள் இரண்டு பகுதிகளாக இங்கே இடம் பெறும். அப்போது, முதல் பகுதிக்கான லிங்க் அங்கே தரப்படும். 
மற்ற கதைகளுக்கு Stories டேப் அழுத்திச் செல்லலாம். இங்கு நாடுகள் வாரியாக, கதை வகைகளின் அடிப்படையில், கதைகள் தரப்பட்டுள்ளன. அனைத்தும் எளிமையான ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன. 
உங்களுடைய கதையை நீங்கள் இங்கு பதிக்க வேண்டும் என்றால், Submit a Story என்ற பட்டனை அழுத்தி, கதைகள் அனுப்புவதற்கான வரையறைகளைக் காணலாம். எடுத்துக்காட்டாக, கதை ஒன்று, 1000 முதல் 1,400 சொற்களுக்குள்ளாகவே இருக்க வேண்டும். மேலும் இங்கு வரும் கதைகளைத் திருத்தி அமைக்கும் பணியினை, தன்னார்வ அடிப்படையில் நீங்கள் செய்து கொடுக்கலாம். 
இந்த தளம் சென்று பாருங்கள். உங்கள் கதை கேட்கும் ஆர்வமும், சொல்லும் ஆர்வமும் வளம் பெறும்.


Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு