Skip to main content

பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு "வழிகாட்டி' நிகழ்ச்சி

பொதுத்தேர்வை முடித்துள்ள, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மாவட்டந்தோறும், "வழிகாட்டி' நிகழ்ச்சியை நடத்த, பள்ளி
கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு, மே, 9ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, மே 23ம் தேதியும் வெளியாகிறது.

பத்தாம் வகுப்பு மாணவர்கள், பிளஸ் 1 வகுப்பில், எந்தெந்த, "குரூப்'பை தேர்வு செய்யலாம்; எந்த, "குரூப்'பை தேர்வு செய்தால், என்னென்ன உயர்கல்வி படிக்க முடியும் என்பது குறித்து, "வழிகாட்டி' நிகழ்ச்சியில் விளக்கிக் கூற, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து விளக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி, தேர்வு முடிவு வெளியானதற்குப் பின், மாவட்டந்தோறும் நடக்கும் என, கல்வித்துறை வட்டாரம், நேற்று தெரிவித்தது.



Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா