Skip to main content

புதிய செய்திச்சேவை துவக்கியது "பேஸ்புக்'

பேஸ்புக்'கை பயன்படுத்துவோரால் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை சரிபார்த்து, அவற்றை, உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகள், செய்தி நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள வசதியாக, புதிய செய்தி பக்கத்தை, "பேஸ்புக்' நிறுவனம், அறிமுகப்படுத்தி உள்ளது. "பேஸ்புக்'கை
பயன்படுத்துவோர், தினசரி, கோடிக்கணக்கான நிகழ்வுகளையும், செய்திகளையும், நொடிப்பொழுதில், தங்கள், "பேஸ்புக்' பக்கத்தில் வெளியிடுகின்றனர். அவர்களால் வெளியிடப்படும் தகவல்கள், பெரும்பாலும், புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் தான் இருக்கும். அதனால், அவற்றில் சில தகவல்கள், ஊடகங்களில் 
செய்திகளாக வெளியிடும் வகையில் அமைந்துவிடுகின்றன. எனினும், அவற்றின் நம்பகத்தன்மையை சரிபார்க்க முடிவதில்லை. அதற்காக, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், "ஸ்டோரிபுல்' எனும் நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த நிறுவனம், "பேஸ்புக்'கில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை சரிபார்த்து, அவற்றை, ஆங்கில ஊடகங்களுடன் மட்டும், தற்போது பகிர்ந்து கொள்கிறது. இந்த நிலையில், "பேஸ்புக்' நிறுவனம், "ஸ்டோரிபுல்' நிறுவனத்தின் உதவியுடன், "பேஸ்புக்'கில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை சரிபார்த்து, அவற்றை, facebook.com/FBnewswire எனும் பக்கத்தில், செய்தியாக வெளியிட திட்டமிட்டது. இதை தொடர்ந்து, அந்த பக்கத்திற்கான சேவை, நேற்று முதல், உலகம் முழுவதும் துவங்கப்பட்டது. அதில், தனி நபர் பகிர்ந்து கொள்ளும் தகவல் மட்டுமில்லாமல், அரசு சார்ந்த நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களும், செய்தியின் மதிப்பை பொறுத்து வெளியிடப்படுகின்றன. இந்திய மொழிகளில், இது போன்ற செய்தி சேவை துவங்குவது குறித்து, "பேஸ்புக்' நிறுவனம், எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.



Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா