கல்லூரி உதவி பேராசி ரியர் பணிக்கான தேசிய அளவிலானதகுதி தேர்வு வருகிற ஜுன் 29ந்தேதி நாடு முழுவதும் நடைபெற உள் ளது. பல்கலைக்கழக மானி யக்குழு (யு.ஜி.சி) தேசிய அளவிலான தகுதி தேர்வு ஆண்டுக்கு 2 முறையும், மாநிலஅளவிலான தகுதி தேர்வு ஆண்டுக்கு ஒரு முறையும்
நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாநி லத்திலும் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள் மூல மாக இந்த தேர்வு நடத்தப் பட்டு வருகிறது. இந்த ஆண்டில்தேசிய அளவி லான தகுதி தேர்வு வருகின்ற ஜூன் மாதம் 29ந்தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க லாம். தேர்வு எழுத விரும்புபவர்கள் றறற.ரபஉ.யஉ.in என்றபல்கலைக்கழக மானி யக்குழு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண் ணப்பிக்க மே 5ந்தேதிகடைசி நாள் என அறி விக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீல னை செய்யப்பட்டு தேர்வு எழுதுவதற்கு தகுதியானவர் கள் பட்டியல் பல்கலைக்கழக மானியக்குழு இணை யதளத்தில் வெளியிடப் படும். அதேபோல் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் வாரியாக தேர்வு நடைபெறும் விவரங்கள், யாருக்கு எந்தெந்த மையங் கள் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளன என்ற விவரங்களும் வெளியிடப்படும்.
தேர்வு எழுத விண்ணப் பித்ததகுதியான விண்ணப்ப தாரர்களுக்கு நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படும். அதை தேர்வு எழுதுபவர்கள் பதி விறக்கம் செய்து தேர்வு மை யத்திற்கு செல்லலாம். தேர் வின்போது நுழைவுச்சீட்டு மற்றும் ஏதாவது ஒரு அடையாள அட்டையை உடன் கொண்டுசெல்ல வேண்டும். இவ்வாறு பல்கலைக்கழக மானியக்குழு இணையதளத்தில் சுற்ற றிக்கை வெளியிட்டுள்ளது.