Skip to main content

ஆன்லைன்மூலம் தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

வரும் மே, ஜூன் மாதங்களில் நடைபெற உள்ள அரசு தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறையின் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஓவியம், இந்திய இசை, நடனம், அச்சுக்கலை, விவசாயம், கைத்தறி நெசவு மற்றும் தையல் பிரிவுகளுக்கான அரசு தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு
ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் மற்றும் அறிவுரைகளை (பக்கம் 1 முதல் 7 வரை) பதிவிறக்கம் செய்து ஏப்ரல் 28 முதல் மே 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறைந்தபட்ச கல்வித்தகுதிக்கான சான்றிதழின் நகலுடன் இணைத்து விண்ணப்பிக்கும் தேர்வர்கள் வசிக்கும் கல்வி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மையத்தில் நேரடியாக கொடுக்க வேண்டும்.
கல்வி மாவட்டத்தின் பெயர், ஒருங்கிணைப்பு மையம் என்ற அடிப்படையில் விவரம்:
புதுக்கோட்டை- செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளி, கரூர் - நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரியலூர்- அரசு மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர் - சிறி ராமகிருஷ்ணா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, திருச்சி - மரக்கடை சையது முர்துஷா அரசு மேல்நிலைப் பள்ளி, நாகப்பட்டினம்- நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவாரூர் - கஸ்தூரிபா காந்தி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்- அரசு மேல்நிலைப் பள்ளி, மேம்பாலம்.
ஒருங்கிணைப்பு மையங்களில் கணினி புகைப்படக் கருவிகள் மூலமாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால் அங்கேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொண்ட பின்ன், தேர்வுக் கட்டணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஏற்கெனவே தபால் மூலம் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுவிட்டன.
தேர்வுக் கட்டணத்துடன் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக கூடுதலாக ரூ.50-யும் விண்ணப்பத்தை நேரில் சமர்ப்பிக்கும்போது பணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை மே 3-ம் தேதி மாலை 5 மணிவரை ஒருங்கிணைப்பு மையங்களில் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு