Skip to main content

விடைத்தாள் திருத்தும் பணியில் 'எஸ்கேப்' : தயாராகிறது ஆசிரியர்கள் பட்டியல்

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணியில், பங்கேற்காத ஆசிரியர்கள் குறித்த விவரப் பட்டியல், மாவட்டம் வாரியாக தாயாரகிறது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3 துவங்கி 25 வரையும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 26 துவங்கி, ஏப்., 9 வரையும் நடந்தன. இதற்கான விடைத்தாள் திருத்தும் பணி, பிளஸ் 2விற்கு, மார்ச் 28 முதல் ஏப்., 12 வரையும், பத்தாம் வகுப்பிற்கு ஏப்.,10 முதல் 22 வரையும் நடந்தன.
லோக்சபா தேர்தல் பணிகள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை போன்ற காரணங்களால், தேர்வுத் துறை எதிர்பார்த்த நாட்களுக்குள், விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவுறாமல் போனதாக சர்ச்சை எழுந்துள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணி ஒதுக்கப்பட்டு, வராத ஆசிரியர்கள் 'பட்டியல்' கேட்டு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு,'ஆன்-லைன்' மூலம் தேர்வு துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்தொடர்ச்சி யாக, முதன்மை கல்வி அலுவலகங்களில் இருந்து, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், 'ஆன்-லைன்' மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அதில் பங்கேற்காத ஆசிரியர்கள் விவர பட்டியல் ஒரு வாரத்திற்குள் அளிக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: விடைத்தாள் திருத்தும் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியவில்லை. அப்பணியில் பங்கேற்ற மற்றும் பங்கேற்காத ஆசிரியர் விவரங்களை மாவட்டம் வாரியாக தேர்வுத் துறை கேட்டுள்ளது. பணி ஒதுக்கியும் பங்கேற்காத ஆசிரியர்கள் சரியான விளக்கம் அளிக்காத பட்சத்தில், தேர்வுத்துறை அவர்களை எச்சரிக்கலாம் அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம், என்றார். இதனால் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.