Skip to main content

தந்தி சேவைக்கு இணையாக முந்தி செல்லும் 'இ போஸ்ட்'; வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு.

தபால் துறையின் ஈடு இணையற்ற சேவைகளில் ஒன்றான தந்தி சேவைக்கு இணையாக,தற்போது 'இ போஸ்ட்' சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.
தபால் துறையில்,160 ஆண்டுகளாக புழக்கத்திலிருந்த, தந்தி சேவை
, கடந்தாண்டு ஜூலை முதல் நிறுத்தப்பட்டது.




தொடர்ந்து, 'இ-போஸ்ட்' எனப்படும் மின்னணு தந்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.'இ-மெயில்' போல செயல்படும் இம்முறையில், கையால் எழுதப்பட்ட தகவல் அல்லது, 'பிரிண்ட்'செய்யப்பட்ட தகவல், 'ஸ்கேன்' செய்து, தகவல் தருபவர் குறிப்பிடும் இடத்தில் உள்ள தபால் நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. பின், சம்பந்தப்பட்ட இடத்திலுள்ள தபால்காரர், அத்தகவலை உரியவரின்இடத்துக்கு கொண்டு சேர்ப்பார். கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட அனைத்து தபால் நிலையங்களிலும்இச்சேவை அளிக்கப்படுகிறது.மாநகராட்சி சார்பில் அறிக்கைகள், வரி நோட்டீஸ்கள் இம்முறையில்அனுப்பப்படுகின்றன. மேலும், தனியார் நிறுவனங்களும் இம்முறையைப் பயன்படுத்தி வருகின்றன.பன்னாட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், 'இ--போஸ்ட் கார்ப்பரேட்' எனும்திட்டத்தில், 9,999 முகவரிகளுக்கு, ஒரே நேரத்தில் தகவலை அனுப்ப முடியும். 'ஏ 4' சைஸ் பேப்பர் ஒன்றுக்கு 10 ரூபாயும், அதே தகவலை 50க்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்ப, ஒரு தகவலுக்கு, ஐந்து ரூபாயும்வசூலிக்கப்படுகிறது.தந்தி சேவை பயன்பாட்டில் இருந்தபோது வார்த்தைக்கு 50 பைசா என வசூல்செய்யப்பட்டது. ஆனால், 'இ போஸ்ட் சேவை'யில் ஏ4 சைஸ் பேப்பருக்கு 10 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுவதால், வாடிக்கையாளர்களின்எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது.

கோவை தலைமை தபால் அதிகாரி ஒருவர் கூறுகையில்,'தந்தி சேவை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, தற்போது இ-போஸ்ட்டில்வாழ்த்துக்கள் அனுப்பும் முறை அதிகரித்துள்ளது. கோவையில், முதலில் மாநகராட்சி மற்றும் ஒரு சில தனியார் நிறுவனங்கள்மட்டுமே பயன்படுத்தி வந்தன. 'தற்போது, தேர்தல் சீசன் என்பதால், அரசியல் கட்சியினர் பயன்படுத்துகின்றனர்.நடிகர்களின் பிறந்த நாட்களில் ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் இ-போஸ்ட் பயன்படுத்தி, வாழ்த்து அனுப்புகின்றனர். இது குறித்த விழிப்புணர்வை, மக்களிடையே ஏற்படுத்தும் பல்வேறு செயலில்ஈடுப்பட்டுள்ளோம்' என்றார்.


Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு