Skip to main content

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம்: ஐகோர்ட் உத்தரவு

தொழிற்கல்வி ஆசிரியர்களாக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர்களுக்கு, பகுதிநேர பணிக்காலத்தின், 50 சதவீதத்தை, நிரந்தர பணிக்காலத்துடன் சேர்த்து, ஓய்வூதியப் பலன்கள் வழங்க வேண்டும்' என, அரசுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
கடலாடி பூதகுடி ராமர், மதுரை ஐ?கோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: தொழிற்கல்வி பகுதிநேர ஆசிரியராக, 1980ல் பணியில் சேர்ந்தேன். 2013ல் ஓய்வு பெற்றேன். பகுதிநேர பணிக்காலத்தின், 50 சதவீதத்தை, நிரந்தர பணிக்காலத்துடன் சேர்த்து, ஓய்வூதியப் பலன்கள் வழங்கக் கோரி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்து, நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, மனு மீது, 12 வாரங்களுக்குள், பள்ளிக்கல்வித் துறை செயலர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்