Skip to main content

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம்: ஐகோர்ட் உத்தரவு

தொழிற்கல்வி ஆசிரியர்களாக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர்களுக்கு, பகுதிநேர பணிக்காலத்தின், 50 சதவீதத்தை, நிரந்தர பணிக்காலத்துடன் சேர்த்து, ஓய்வூதியப் பலன்கள் வழங்க வேண்டும்' என, அரசுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
கடலாடி பூதகுடி ராமர், மதுரை ஐ?கோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: தொழிற்கல்வி பகுதிநேர ஆசிரியராக, 1980ல் பணியில் சேர்ந்தேன். 2013ல் ஓய்வு பெற்றேன். பகுதிநேர பணிக்காலத்தின், 50 சதவீதத்தை, நிரந்தர பணிக்காலத்துடன் சேர்த்து, ஓய்வூதியப் பலன்கள் வழங்கக் கோரி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்து, நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, மனு மீது, 12 வாரங்களுக்குள், பள்ளிக்கல்வித் துறை செயலர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.