Skip to main content

இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 44 மாணவியர் விடுதி ஜூனில் கட்டுமான பணியை துவக்க திட்டம்

இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் ரூ.105 கோடி செலவில் தமிழகம் முழுவதும் 13 மாவட்டங்களில் 44 மாணவியர் விடுதிக்கான கட்டுமான பணியை விரைவில் தொடங்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளில் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் கல்வி திறனை வளர்த் தல், இடைநிற்றலை தவிர்த் தல், தேர்ச்சி விகிதத்தை அதிகரித்தல், கூடுதல் வகுப்பறைகளை கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின மூலம் தமிழகம் முழுவதும் ரூ.105 கோடி செலவில் 13 மாவட்டங்களில் மாணவியர்கள் விடுதிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கடலூர் மாவட்டத்தில் 3, விழுப்புரம் மாவட்டத்தில் 8, கிருஷ்ணகிரியில் 4, தர்மபுரியில் 3, சேலத்தில் 12 என மொத்தம் 44 இடங்களில் பொதுப்பணித்துறையின் மூலம் விடுதிகள் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை விரைவில் துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கூறும் போது, தமிழத்தில் கடந்த 2009 திமுக ஆட்சியில் மாணவர்களின் நலன் கருதி இடைநிலை கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. 

இந்த திட்டத்தின் மூலம் அரசு சார்ந்த உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் தரமான இடைநிலை கல்வி உறுதி செய்யும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. இந்த திட்டத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 13 மாவட்டங்களில் 44 இடங்களில் மாணவியர் விடுதிகளை கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணி வருகிற ஜூனில் தொடங்கும்‘ என்றார்.


Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு