Skip to main content

குரூப் 4 தேர்வுக்கான கவுன்சலிங் தேர்வாளர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. புது அறிவிப்பு

பொது, பிசி மற்றும் எம்பிசி பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்டது. எனவே, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், தேர்வாணைய இணையதளத்தில் கலந்தாய்வு முடிவில் அன்றை தினம் வெளியிடப்படும், இனவாரியான எஞ்சியுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை பற்றிய செய்தியினை ஆய்ந்து உறுதி செய்து அவரவர் பிரிவில் காலி பணியிடங்கள் இருந்தால் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட நாளில் கலந்து கொள்ள வேண்டும்’’ என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2013-14ம் ஆண்டுக்கான குரூப் 4 பதவியில் அடங்கிய இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் பதவிக்கான தேர்வு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி நடந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல் அனைத்து பிரிவுகளை சார்ந்த பொது காலி பணியிடங்களுக்கு (3288 காலி பணியிடம்) முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது. முதல் ஆறாயிரம் தர வரிசையில் உள்ள எல்லா விண்ணப்பதாரருக்கும், கடந்த 1ம் தேதி முதல் மே 8ம் தேதி வரை (ஒவ்வொரு நாளும் 300 பேர் என்ற அடிப்படையில்) முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு வருமாறு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இதுவரை (நேற்று வரை) நடைபெற்ற கலந்தாய்வு மூலம், பொது காலிபணியிடங்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான காலி பணியிடம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான காலி பணியிடங்கள் ஆகிய பணியிடங்கள் தக்க விண்ணப்பதாரால் நிரப்பப்பட்டுவிட்டன. எனவே சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பதாரரும், தேர்வாணைய இணையதளத்தில் கலந்தாய்வு முடிவில் அன்றை தினம் வெளியிடப்படும் இனவாரியான எஞ்சியுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை பற்றிய செய்தியினை ஆய்ந்து உறுதி செய்து அவரவர் பிரிவில் காலி பணியிடங்கள் இருந்தால் மட்டுமே அவரவர் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட நாளில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

10ம் வகுப்பு துணைத்தேர்வு தக்கலில் விண்ணப்பிக்க ஏற்பாடு

கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்காக ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. கடைசி நாள் வரை விண்ணப்பிக்காதவர்கள்