Skip to main content

2 மணி நேரத்துக்கு ஒரு முறை எஸ்.எம்.எஸ்.,; ஓட்டுப்பதிவு நிகழ்வுகளை அனுப்ப உத்தரவு

ஓட்டுப்பதிவு நிகழ்வு தொடர்பாக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தேர்தல் கமிஷனுக்கு நேரடியாக எஸ்.எம்.எஸ்., அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும், ஓட்டுச்சாவடி அலுவலர்களே முழு பொறுப்பு. இவர்கள் பணியாற்ற வேண்டிய ஓட்டுச்சாவடி
விவரம், அதற்கான நியமன உத்தரவு, நாளை (23ம் தேதி) காலை, வழங்கப்படும்.
ஓட்டுச்சாவடி அலுவலர் மற்றும் நிலை அலுவலர்கள் அனைவரும், நாளை மதியத்துக்குள், அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் ஆஜராக வேண்டும். ஆஜரானதில் இருந்து, அனைத்து நடவடிக்கைகளையும், எஸ்.எம்.எஸ்., மூலமாக தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் வந்த விவரம், கட்சி ஏஜன்டுகள் விவரம், மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது, ஓட்டுப்பதிவு துவங்கியது முதல், ஒவ்வொரு நிகழ்வுகளையும், தேர்தல் கமிஷனுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்க வேண்டும். சென்னையில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தில், அவ்விவரங்கள் பதிவாகும். ஓட்டுப்பதிவு துவங்கியதில் இருந்து, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, ஓட்டுப்பதிவு விவரங்களை தெரிவிக்க வேண்டும். குளறுபடி ஏற்பட்டு, ஓட்டுப்பதிவு தடைபட்டாலும், அதன்பின், சரி செய்து ஓட்டுப்பதிவு துவங்கியதையும் தெரிவிக்க வேண்டும். இறுதியாக, ஓட்டளித்த ஆண் வாக்காளர்கள்; ஓட்டளித்த பெண் வாக்காளர்கள்; மொத்தம் பதிவான ஓட்டுக்கள், ஓட்டுப்பதிவு நிறைவு ஆகிய விவரங்களையும், எஸ்.எம்.எஸ்., மூலமாக அனுப்ப வேண்டும். தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, "ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அந்தந்த மண்டல அலுவலர்களுக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம். இம்முறை, தேர்தல் கமிஷன் தரப்பில் மொபைல் எண்கள் வழங்கப்படும். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அனுப்பும் குறுந்தகவல், நேரடியாக கம்ப்யூட்டரில் பதிவாகும். கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையிலும், ஓட்டுப்பதிவு விவரங்கள் சேகரிக்கப்படும்,' என்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்