Skip to main content

ஐ.சி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 15க்கு பிறகு வெளியீடு

ICSE வாரியத்தின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 15ம் தேதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
கடந்த ஆண்டு இதே முடிவுகள் மே 17ம் தேதி வெளியிடப்பட்டன. இந்தாண்டு ICSE பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 3 முதல் மார்ச் 29ம் தேதி வரை நடத்தப்பட்டன.
இத்தேர்வு, 2,500 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது மற்றும் 650 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. 
CISCE -ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளைக் காணலாம். www.cisce.orgஅல்லது www.cisce.in.com ஆகிய தளங்களில் ஒன்றில் log on செய்து, இண்டக்ஸ் எண்களை நிரப்பி, அதன்பிறகு, பதிவு எண்ணை செலுத்தி தங்களின் மதிப்பெண் விபரங்களை அறியலாம். 
அதேசமயம், மேற்கண்ட விபரங்களை அளித்து, மொபைல் போனில் SMS அனுப்புவதன் மூலமாகவும் ஒருவர் தனது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ICSE வாரிய மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 98.20 என்பதாக இருந்தது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.