வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசிறீயிடம் கேட்டபோது
அவர் கூறியது:தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு நாளொன்றுக்கு ரூ. 150 உணவுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொகையாகப் பெற்றுக் கொள்ளலாமா அல்லது உணவு வழங்க வேண்டுமா என அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை நடைபெறும் இறுதிக் கட்ட பயிற்சியின்போது முடிவு செய்யப்பட்டு அவர்களின் விருப்பத்துக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.