Skip to main content

மருத்துவப் படிப்பு; மே 14 முதல் விண்ணப்பம் விநியோகம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி
ஆகியவற்றில் மே 14-ஆம் தேதி விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

மே 14-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை விநியோகிக்க மருத்துவக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் மே 9-ஆம் தேதி வெளியாகின்றன. பிளஸ் 2 பாடத் திட்டத்தில் கணிதம்-இயற்பியல்-வேதியியல் ஆகியவற்றை முக்கிய பாடமாக எடுத்துப் படித்த மாணவர்கள் பி.இ. படிப்பையும், உயிரியல்-வேதியியல்-இயற்பியல் ஆகியவற்றை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்த பெரும்பாலான மாணவர்கள் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளையும் தேர்வு செய்வது வழக்கமாக உள்ளது.

எனினும் கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் பொருத்து உயிரியல் படித்த மாணவர்கள்கூட பி.இ. படிப்பைத் தேர்வு செய்வது உண்டு. பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 3-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகம் விநியோகிக்க உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 2,555; இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு உரிய 15 சதவீத இடங்கள், அதாவது 383 எம்.பி.பி.எஸ். இடங்கள் போக மீதமுள்ள 2,172 எம்.பி.பி.எஸ். இடங்கள் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரியவை ஆகும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடத்துக்கு கல்விக் கட்டணம் ரூ.4,000-த்தையும் சேர்த்து ஆண்டுக் கட்டணம் ரூ.12,290தான். இந்த இடங்கள் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் கலந்தாய்வு நடைபெறும்.

900 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள்: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் செயல்படும் 12 தனியார் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பிக்கும் 900-த்துக்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரே விண்ணப்பம்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து வழக்கம்போல் ஒரே விண்ணப்பத்தை மாணவர்கள் பூர்த்தி செய்தாலே போதுமானது. எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைக்காத மாணவர்களுக்கு, கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் பி.டி.எஸ். படிப்பில் சேர வாய்ப்பு அளிக்கப்படும்.


Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்