Skip to main content

வாக்களிக்க தேவையான 12 ஆவணங்கள் எவை?

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க அடையாளச் சான்றாக 12 வகையான ஆவணங்களை தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ளது. இந்த ஆவணங்களின் அசல் பிரதியை எடுத்துச் சென்று வாக்காளர்கள் தங்களது
வாக்குகளைச் செலுத்தலாம். அந்த ஆவணங்களின் விவரங்கள்:

1. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை.

2. பாஸ்போர்ட்

3. வாகன ஓட்டுநர் உரிமம்.

4. மத்திய-மாநில அரசுகள்-பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கியுள்ள அடையாள அட்டைகள்.

5. வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வழங்கியுள்ள புகைப்படம் ஒட்டப்பட்ட சேமிப்புக் கணக்குப் புத்தகம்.

6. வருமான வரிக் கணக்கு அட்டை (பான் அட்டை)

7. ஆதார் அடையாள அட்டை.

8. தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்ட் அட்டை.

9. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டை.

10. மத்திய தொழிலாளர் நலத் துறை வழங்கியுள்ள சுகாதார காப்பீட்டு திட்டத்துக்கான ஸ்மார்ட் கார்டு.

11. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.

12. தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழங்கப்படும் வாக்குச்சாவடி சீட்டு.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்