Skip to main content

கணினி அறிவியலில் அதிக மதிப்பெண் எளிது: மாணவர்கள் மகிழ்ச்சி

"பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில், வினாக்கள் பெரும்பாலும் எளிமையாக அமைந்ததால், அதிக மதிப்பெண் பெற முடியும்," என மாணவர்கள் தெரிவித்தனர்.


இத்தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியரின் கருத்து:


பெனாசீர், மாணவி, ஜோதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மதுரை: அனைத்து வினாக்களும் 'புளு பிரின்ட்' அடிப்படையில் தான் கேட்கப்பட்டன. தொகுதி1 மற்றும் தொகுதி2ல் இருந்து சம அளவில் கேள்விகள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக, 'சி++', 'ஸ்டார் ஆபீஸ் ரைட்டர் ஓர் அறிமுகம்', ஆகிய பாடங்களில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட வினாக்கள் வந்திருந்தன. அதேபோல், 35 மதிப்பெண்களுக்கான ஐந்து மார்க் வினாக்களும் அடிக்கடி கேட்கப்பட்டவையாக தான் இருந்தன. 150க்கு 140க்கும் மேல் எளிதாக எடுக்க முடியும்.


அஜ்மீர், மாணவர், இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, மதுரை: தொகுதி1ல் உரை வடிவூட்டல், அட்டவணையில் வேலை செய்தல், பல்லூடகம் அறிமுகம் ஆகிய பாடங்களிலும் எதிர்பார்த்த கேள்விகள் கேட்கப்பட்டன. 76, 77, 79 மற்றும் 86 ஆகிய கட்டாய வினாக்கள் சுமாராக படிக்கும் மாணவர்களுக்கு கொஞ்சம் கடினமாக அமைந்திருக்கும்.


கார்த்திக், ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தா.வாடிப்பட்டி: சுமாராக படிக்கும் மாணவர்கள் கூட, எளிதாக 70 மதிப்பெண் எடுக்கும் வகையில் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. ஒரு மதிப்பெண் வினாவில், 5 வினாக்கள் யோசித்து எழுதும் வகையில் அமைந்திருந்தன. 2 மதிப்பெண் வினாவில் 25 கொடுத்து, 20 வினாக்களுக்கு பதில் எழுத வேண்டும். இதில், 21 வினாக்கள் எளிமையாக அமைந்திருந்தன. 5 மதிப்பெண் பகுதியில், 10க்கு 7 வினாக்கள் எழுத வேண்டும். இதில், 7 வினாக்களும் அடிக்கடி கேட்கப்பட்டவையாக இருந்தன. இத்தேர்வில், 190 மதிப்பெண் வரை மாணவர்கள் எளிதாக பெறலாம், என்றார்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு