Skip to main content

"மை ஸ்டாம்ப்" திட்டம்: கோவையில் வாடிக்கையாளர்கள் ஆர்வம்.

வாடிக்கையாளர்களின் புகைப்படத்துடன் கூடிய தபால் தலைகளை ஒட்டி அனுப்பும், தபால் துறையின் "மை ஸ்டாம்ப்" திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 
கோவையில் மட்டும் இதுவரை 87 பேர் விண்ணப்பித்துள்ளனர்.தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பொதுமக்களை கவரும் வகையில், தபால் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. 

நவீன தகவல் தொடர்பு சவால்களுக்கு இடையேயும் தபால் துறை இன்றும் தனித்துவத்துடனே செயலாற்றி வருகிறது. கடந்தாண்டு தபால் துறையினால் அறிமுகப்படுத்தப்பட்ட "மை ஸ்டாம்ப்" திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.வாடிக்கையாளர்கள் தங்கள் படம், அலுவலக அடையாள சின்னம் என விரும்பும் படங்களை தபால்தலையுடன் இணைத்து அனுப்பலாம். ஐந்து ரூபாய் மதிப்புள்ள தபால் தலையுடன் நமது புகைப்படமும் இடம்பெறும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைமை தபால் நிலையங்களில் விண்ணப்பம் செய்யலாம். ஒரு புகைப்படம் பிரசுரிக்க 300 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். ஐந்து ரூபாய் மதிப்புள்ள 12 புகைப்படத்துடன் கூடிய தபால் தலைகள் அடங்கிய அட்டை ஒரு வாரத்துக்குள் நமக்கு வழங்கப்படும்.ஒருவர் எத்தனை அட்டைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். தேசிய விருது பெற்றமுன்னாள் அஞ்சல் அதிகாரி ஹரிஹரன் கூறுகையில், "இதுவரை விடுதலைப் போராட்ட வீரர்கள், முக்கிய தலைவர்கள், நிகழ்வுகள் மட்டுமே தபால் தலைகளில் அச்சிடப்பட்டு வெளிவந்தன. தங்கள் போட்டோவையே ஒட்டி தபால் அனுப்பும் இத்திட்டம் பள்ளி மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோவையில் மட்டும் இதுவரை 87 பேர், புகைப்படத்துடன் கூடிய தபால்தலை பெற்றுள்ளனர். ஆனால், இந்த திட்டத்தில் உயிருடன் இருப்பவர்கள் புகைப்படம் மட்டுமே பிரசுரிக்க முடியும். பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வந்தாலும், தபால் துறையின் சேவைகள் மக்களின் நம்பகத்தன்மையை மேலும் வலுவூட்டுகின்றன" என்றார்.தபால் தலையில் தங்கள் புகைப்படம் இடம்பெற விரும்புவோர், இதற்கான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து தலைமை தபால் நிலையத்தில் கொடுக்க வேண்டும்.இயலாதவர்கள் கோவை தபால்தலை சேகரிப்பு மையத்தில் நேரடியாக பணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் போது ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (வெள்ளை கலர் பின்னணியுடன் இருக்க வேண்டும்) மற்றும் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை நகல் இணைக்க வேண்டும். குழந்தைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, பெற்றோர்களில் யாராவது ஒருவர் அடையாள அட்டை நகல் சமர்ப்பிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா