Skip to main content

"மை ஸ்டாம்ப்" திட்டம்: கோவையில் வாடிக்கையாளர்கள் ஆர்வம்.

வாடிக்கையாளர்களின் புகைப்படத்துடன் கூடிய தபால் தலைகளை ஒட்டி அனுப்பும், தபால் துறையின் "மை ஸ்டாம்ப்" திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 
கோவையில் மட்டும் இதுவரை 87 பேர் விண்ணப்பித்துள்ளனர்.தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பொதுமக்களை கவரும் வகையில், தபால் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. 

நவீன தகவல் தொடர்பு சவால்களுக்கு இடையேயும் தபால் துறை இன்றும் தனித்துவத்துடனே செயலாற்றி வருகிறது. கடந்தாண்டு தபால் துறையினால் அறிமுகப்படுத்தப்பட்ட "மை ஸ்டாம்ப்" திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.வாடிக்கையாளர்கள் தங்கள் படம், அலுவலக அடையாள சின்னம் என விரும்பும் படங்களை தபால்தலையுடன் இணைத்து அனுப்பலாம். ஐந்து ரூபாய் மதிப்புள்ள தபால் தலையுடன் நமது புகைப்படமும் இடம்பெறும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைமை தபால் நிலையங்களில் விண்ணப்பம் செய்யலாம். ஒரு புகைப்படம் பிரசுரிக்க 300 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். ஐந்து ரூபாய் மதிப்புள்ள 12 புகைப்படத்துடன் கூடிய தபால் தலைகள் அடங்கிய அட்டை ஒரு வாரத்துக்குள் நமக்கு வழங்கப்படும்.ஒருவர் எத்தனை அட்டைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். தேசிய விருது பெற்றமுன்னாள் அஞ்சல் அதிகாரி ஹரிஹரன் கூறுகையில், "இதுவரை விடுதலைப் போராட்ட வீரர்கள், முக்கிய தலைவர்கள், நிகழ்வுகள் மட்டுமே தபால் தலைகளில் அச்சிடப்பட்டு வெளிவந்தன. தங்கள் போட்டோவையே ஒட்டி தபால் அனுப்பும் இத்திட்டம் பள்ளி மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோவையில் மட்டும் இதுவரை 87 பேர், புகைப்படத்துடன் கூடிய தபால்தலை பெற்றுள்ளனர். ஆனால், இந்த திட்டத்தில் உயிருடன் இருப்பவர்கள் புகைப்படம் மட்டுமே பிரசுரிக்க முடியும். பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வந்தாலும், தபால் துறையின் சேவைகள் மக்களின் நம்பகத்தன்மையை மேலும் வலுவூட்டுகின்றன" என்றார்.தபால் தலையில் தங்கள் புகைப்படம் இடம்பெற விரும்புவோர், இதற்கான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து தலைமை தபால் நிலையத்தில் கொடுக்க வேண்டும்.இயலாதவர்கள் கோவை தபால்தலை சேகரிப்பு மையத்தில் நேரடியாக பணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் போது ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (வெள்ளை கலர் பின்னணியுடன் இருக்க வேண்டும்) மற்றும் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை நகல் இணைக்க வேண்டும். குழந்தைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, பெற்றோர்களில் யாராவது ஒருவர் அடையாள அட்டை நகல் சமர்ப்பிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு