Skip to main content

தலைமைச் செயலகம் உள்படஅரசு துறை அலுவலகங்களில் ஃபேஸ்புக், டிவிட்டருக்கு தடை

தலைமைச் செயலகம் உள்பட அரசுத் துறை அலுவலகங்களில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசுத் துறைகளின் தலைமை அலுவலகங்கள், ஆணையர் அலுவலங்கள் ஆகியன தலைமைச் செயலகம், சென்னை சேப்பாக்கம் எழிலகம் ஆகியவற்றில் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் கம்ப்யூட்டர்களுடன் இணையதள வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதள வசதியைப் பயன்படுத்தி, அரசுத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். மக்களவைத் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சமூக ஊடகங்களை அலுவலக நேரங்களில் பார்க்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அரசுத் துறைகளின் அனைத்து கம்ப்யூட்டர்களிலும், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களைப் பார்க்க முடியாதபடி அவற்றை தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது தேர்தல் ஆணையம்.
இதுகுறித்து, தேர்தல் துறை அதிகாரிகள் கூறுகையில், அரசுத் துறைகளில் உள்ளவர்களில் பலரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சமூக ஊடகங்களில் அவர்கள் கருத்துகளைத் தெரிவிப்பதும், பதிவு செய்வதும், தேர்தல் பணியின் போது அவர்களது நடுநிலையை பாதிக்கச் செய்யும். எனவே, அலுவலக நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியாதபடி அவை தடை செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா