Skip to main content

பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள் மிக எளிது: மாணவர்கள், ஆசிரியர் கருத்து

'தமிழ் முதல்தாள் மிக எளிதாக இருந்தது,' என, மாணவர்கள், ஆசிரியர் கருத்து தெரிவித்துள்ளனர்.


எம்.கார்த்திகேயன், மாணவர், அச்சுதா அகாடமி மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: 'ப்ளு பிரிண்ட்' படி, கேள்விகள் கேட்கப்பட்டது. ஒரு மதிப்பெண் பயிற்சி வினாக்கள் அனைத்தும், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது. ஒரு மதிப்பெண் பகுதியில், ஒன்பதாவது கேள்வி பாடத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டது. நான்கு மதிப்பெண் பகுதியில், 39 வது கேள்விக்குரிய பதில் தெரிந்திருந்தாலே, 9 ம் கேள்விக்கும் பதில் அளித்துவிடலாம். மொத்தத்தில் தேர்வு எளிதாக இருந்தது.


பி.சக்திபிரீத்தி, மாணவி, எஸ்.எம்.பி.எம்., மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: பாடத்தின் பின்புறத்தில் உள்ள பயிற்சிகள், கேள்விகளை முழுமையாக படித்திருந்தால், 95 மதிப்பெண்கள் மேல், பெற முடியும். எட்டு மதிப்பெண் பகுதியில் ஏற்கனவே நடந்த தேர்வுகளில் பலமுறை இடம் பெற்ற கேள்வியே கேட்கப்பட்டதால், எளிதில் பதில் அளிக்க முடிந்தது. செய்யுள் மனப்பாட பகுதி கேள்வியும் எளிதாக இருந்தது.


பெ.கோவிந்தராசு, ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, க.புதுக்கோட்டை: பிளஸ் 2 வை போல், 'பார்கோடு' முறை இருந்தது. மெதுவாக கற்றல் மாணவர்கள் கூட, எளிதில் தேர்ச்சி பெறும் வகையில், வினாக்கள் இருந்தது. இந்தமுறை நன்றாக படிக்க கூடிய மாணவர்கள், 90 மதிப்பெண்கள் மேல், பெற முடியும். பிரிவு நான்கில் உரைநடை பகுதியில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி, யார் வேண்டுமானாலும் எழுதமுடியும். கேள்விகள் அனைத்தும் புத்தகத்தில் பின்பக்கத்தில் இருந்து கேட்கப்பட்டிருந்து. ஏற்கனவே பலமுறை இடம் பெற்ற கேள்விகளே, அதிகளவில் இருந்தது. இதைவிட எளிமையான வினாத்தாள் அமைய முடியாது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு