Skip to main content

வாக்காளர் தங்கள் விவரங்களை தெரிந்து கொள்ள நவீன வசதிகள்

வாக்காளர் தங்கள் விவரங்களை தெரிந்து கொள்ள நவீன வசதிகள் செய்துதரப்பட்டு உள்ள தாக திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.நடராசன் தெரிவித்துள் ளார்.
இதுகுறித்து அவர்மேலும் தெரிவித்திருப்ப தாவது:வாக்காளர்கள் தங்கள் பெயர், தெருவின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண்களைக் கொண்டு, தாங்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளோமா? என்று தெரிந்துகொள்ள www.elections.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் சென்று பார்வை யிடலாம்.மேலும் வாக்காளர் விவரங்களை பதிவிறக்கமும் செய்து கொள்ள லாம்.
தற்போது உங்கள் வாக்குசாவடியை கண்டறிய உங்களது கை பேசியில் epic SPACE VOTER ID NO என டைப் செய்து 9444123456 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியும் தெரிந்து கொள்ளலாம்.தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 24 மணிநேரமும் இயங் கக்கூடிய கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேர்தல் தொடர்பாக புகார்கள் மற்றும் குறைபாடு களை கட்டணமில்லா தொலை பேசி எண்: 1800 425 7035-க்கு தெரி விக்கலாம். அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பொது மக் கள் அளிக்கும் புகார் கள் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப் படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள் ளார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா