Skip to main content

வாக்காளர் தங்கள் விவரங்களை தெரிந்து கொள்ள நவீன வசதிகள்

வாக்காளர் தங்கள் விவரங்களை தெரிந்து கொள்ள நவீன வசதிகள் செய்துதரப்பட்டு உள்ள தாக திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.நடராசன் தெரிவித்துள் ளார்.
இதுகுறித்து அவர்மேலும் தெரிவித்திருப்ப தாவது:வாக்காளர்கள் தங்கள் பெயர், தெருவின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண்களைக் கொண்டு, தாங்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளோமா? என்று தெரிந்துகொள்ள www.elections.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் சென்று பார்வை யிடலாம்.மேலும் வாக்காளர் விவரங்களை பதிவிறக்கமும் செய்து கொள்ள லாம்.
தற்போது உங்கள் வாக்குசாவடியை கண்டறிய உங்களது கை பேசியில் epic SPACE VOTER ID NO என டைப் செய்து 9444123456 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியும் தெரிந்து கொள்ளலாம்.தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 24 மணிநேரமும் இயங் கக்கூடிய கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேர்தல் தொடர்பாக புகார்கள் மற்றும் குறைபாடு களை கட்டணமில்லா தொலை பேசி எண்: 1800 425 7035-க்கு தெரி விக்கலாம். அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பொது மக் கள் அளிக்கும் புகார் கள் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப் படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள் ளார்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு