Skip to main content

ஐ.ஏ.எஸ். நேர்முகத் தேர்வு ஏப்ரல் 9-ல் தொடங்குகிறது : முதல்கட்டமாக 1,281 பேர் பட்டியல் வெளியீடு

ஐ.ஏ.எஸ். நேர்முகத் தேர்வு ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது. முதல்கட்டமாக 1,281 பேர் அடங்கிய பட்டியலை யூ.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 9 முதல் நேர்காணல்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான
சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது. தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 12 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.சுமார் 1,000 காலியிடங் களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வின் முடிவு கடந்த11-ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் 3003 பேர் தேர்ச்சி அடைந் தனர். தமிழகத்தில் இருந்து ஏறத் தாழ 300 பேர் வெற்றிபெற்றனர். நேர்முகத் தேர்வு ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது.

முதல்கட்ட பட்டியல் வெளியீடு

இந்த நிலையில், நேர்முகத் தேர்வுக்கான முதல்கட்ட பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் 1,281 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள்.பதிவு எண், நேர்முகத் தேர்வு தேதி, நேரம், பெயர் ஆகிய விவரங்களை இந்த பட்டியலில் தெரிந்துகொள்ளலாம். இதர விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத் தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று யூ.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா