Skip to main content

குரூப் - 4 ல்,தேர்வு பெற்றவர்களுக்கு, முதல்கட்டசான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று,சென்னையில் துவங்கியது.

5,855 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் - 4 தேர்வில்,தேர்வு பெற்றவர்களுக்கு, முதல்கட்டசான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று,சென்னையில் துவங்கியது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர்,சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், நில அளவர் ஆகிய பணியிடங்களில், காலியாக உள்ள,5,855 பணியிடங்களை
நிரப்புவதற்கான, குரூப் - 4 
போட்டி தேர்வு, கடந்த ஆண்டு ஆகஸ்ட், 25ல் நடந்தது.இத்தேர்வை, 12 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவை,அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,), 
சமீபத்தில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன 
உத்தரவு வழங்குவதற்கான கலந்தாய்வு, தேர்வாணையஅலுவலகத்தில், நேற்று துவங்கியது. 

முன்னாள் ராணுவவீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு கலந்தாய்வு, நேற்று நடந்தது. இதில், 200 பேர் கலந்து கொண்டனர்.மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும், நேற்று தேர்வு செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களின்வாரிசுகளுக்கு, பணி நியமன உத்தரவு வழங்குவதற்கான கலந்தாய்வும், இன்று நடக்கிறது. ஏப்ரல், 1 முதல், பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்குகிறது. முதல்கட்ட கலந்தாய்வு, தொடர்ந்து, மே 8 வரை நடக்கும் என,தேர்வாணைய செயலர், விஜயகுமார் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு