Skip to main content

தமிழகத்தில் 40 அஞ்சலகங்களில் சி.பி.எஸ்., திட்டம் அறிமுகம்

நாடு முழுவதும் உள்ள தலைமை அஞ்சலகங்களில் வரும், 2016ம் ஆண்டுக்குள், "கோர் பேங்கிங் சிஸ்டம் - சி.பி.எஸ்., வசதி செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் இதுவரை, 40 அஞ்சலகங்களில், இவ்வசதி செய்யப்பட்டுள்ளன. அஞ்சல்துறையில், "கோர் பேங்கிங்' வசதியை ஏற்படுத்த, "எங்கேயும், எப்போதும்' என்ற தலைப்பில், மத்திய அரசு, 700 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. சென்னை, தி.நகர் தலைமை அஞ்சலகத்தில் துவங்கி, மாநிலம் முழுவதும், 40 அஞ்சலகங்களில், சி.பி.எஸ்., திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்த அஞ்சலகங்களில் உள்ள வாடிக்கையாளர் களின் சேமிப்பு கணக்கு மற்றும் அஞ்சலக தொடர் வைப்பு திட்டம் (ரெக்கரிங் டெபாசிட்) கணக்குகள், சி.பி.எஸ்., திட்டத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டு உள்ளன. அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர், "கோர் பேங்கிங்' வசதி உள்ள, எந்த ஒரு அஞ்சலகத்தில் இருந்தும், பண பரிவர்த்தனையை செய்து கொள்ளலாம். இத்திட்டத்திற்கான பிரத்யேக மென்பொருளை, பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவனம் வடி வமைத்து கொடுத்துள்ளது. கோர் பேங்கிங் வசதி செய்யப்பட்டுள்ள அஞ்சல கங்கள் விவரம்: சென்னை: அண்ணாசாலை, தி.நகர், மயிலாப்பூர், தாம்பரம், பழைய கல்லூரி சாலை, கோபாலபுரம், திருவல்லிக்கேணி, மேற்கு மாம்பலம், பல்லாவரம், எத்திராஜ் சாலை, எழும்பூர் மற்றும் கிரீம்ஸ் சாலை அஞ்சலகம். மதுரை மண்டலம்: காரைக்குடி, சிவகாசி, பழநி, நெல்லை, திண்டுக்கல், பாளையங்கோட்டை, வீரப்பன்சத்திரம், பள்ளிபாளையம், வள்ளியூர், நெல்லை கலெக்டர் அலுவலக வளாகம், சங்கர் நகர், பேகம்பூர், செசரி வளாகம் மற்றும் முத்துப்பட்டினம் அஞ்சலகம். கோவை மண்டலம்: பவானி, உதகை, கோவை தலைமை அஞ்சலகம், பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், ராசிபுரம் மற்றும் கோவை சென்ட்ரல் அஞ்சலகம். திருச்சி மண்டலம்: திருச்சி தலைமை அஞ்சலகம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை தலைமை அஞ்சலகம். இதுகுறித்து அஞ்சலக அதிகாரிகள் கூறுகையில், "நாடு முழுவதும் உள்ள, 28, 840 தலைமை அஞ்சலகங்களிலும், 2016ம் ஆண்டிற்குள், "கோர் பேங்கிங்' வசதி செய்யப்பட உள்ளது' என்றனர். "கோர் பேங்கிங்' என்றால் என்ன? : ஆங்கிலத்தில், "சென்ட்ரலைஸ்ட் ஆன்லைன் ரியல்டைம் எலக்ட்ரானிக் பாங்கிங்' என்பதன் சுருக்கமே, கோர் பாங்கிங். இந்த முறையில், கிளை அலுவலகங்கள் அனைத்தும், மத்திய சர்வருடன் இணைக்கப்பட்டு இருக்கும். ஒரு கிளையில் மேற்கொள்ளப்படும் பணிகள், மத்திய சர்வரில் உடனுக்குடன் பதிவாவதால், எந்த கிளைகளில் இருந்தும், வாடிக்கையாளர்கள், பணம் எடுக்கவோ, செலுத்தவோ முடியும். இந்த முறை, பெரும்பாலான, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பின்பற்றப்படுகிறது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு