Skip to main content

பிளஸ் 2 கணித தேர்வில் அச்சுப்பிழை: மறு தேர்வு கோரிய மனு தள்ளுபடி

பிளஸ் 2 கணித தேர்வில், அச்சுப் பிழையுடன் வினா இடம் பெற்றதால், மறு தேர்வு நடத்த கோரிய மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்துள்ளது.


மதுரை, ரத்தினவேல் பாண்டியன் தாக்கல் செய்த மனு: என் மகன் கார்த்திகேயன், கடந்த, 14ம் தேதி, பிளஸ் 2 கணிதத் தேர்வு எழுதினார். பகுதி, 'பி'யில், வினா, 47ல், ஒரு எண்ணில் அச்சுப்பிழை காரணமாக, வினாவின் பொருள் மாறி, குழப்பம் ஏற்பட்டது. இதற்கு தவறான பதில் எழுதியிருந்தாலும், 6 மதிப்பெண் வழங்குமாறு, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அந்த வினாவிற்கு பதிலளிக்க, கார்த்திகேயன், 15 நிமிடம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். மனக் குழப்பத்தால், மற்ற கேள்விகளுக்கு, தெளிவான பதிலை குறித்த நேரத்தில், எழுத முடியவில்லை. பொறியியல், மருத்துவ படிப்பில் சேர, 0.5 மதிப்பெண் கூட, மிக மதிப்புமிக்கது. கூடுதலாக, 6 மதிப் பெண் வழங்கப்படும் என்ற உத்தரவால், திறமை குன்றிய மாணவர்கள் கூட, அதிக மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. எனவே, கடந்த, 14ல் நடந்த கணிதத் தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டு இருந்தார். நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன், மனு விசாரணைக்கு வந்தது.



தகுதியற்றது:






அரசு வழக்கறிஞர் முத்துக்கண்ணன், 'வினா, 47க்கு விடையளித்திருந்தால், அதாவது தவறாக எழுதியிருந்தால் கூட, 6 மதிப்பெண் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மனுதாரர், அக்கேள்விக்கு விடையளிக்காததால், அவருக்கு மதிப்பெண் வழங்க இயலாது' என, தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி, 'இம்மனு தகுதியற்றது; தள்ளுபடி செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டுள்ளார்

Comments

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்