Skip to main content

பிளஸ்2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு; பால் பாய்ன்ட்' பேனா பயன்படுத்துமாறு, அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தேவராஜன் அறிவுறுத்தல்

பிளஸ்2 மாணவர்கள் இன்று இறுதி நாளாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு எழுதுகின்றனர். இம்மாணவர்களுக்கு வழங்கப்படும் ஓ.எம்.ஆர்., ஷீட்டில் 'கருப்பு அல்லது நீல நிற, 'பால் பாய்ன்ட்' பேனா பயன்படுத்துமாறு, அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தேவராஜன் அறிவுறுத்தியுள்ளார்.மாநிலம் முழுவதும், கடந்த மார்ச் 3ம் தேதி முதல் பிளஸ் 2 தேர்வுகள் நடந்துவருகிறது; இன்று நிறைவடைகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக நடந்துவருகிறது.கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில், ஓ.எம்.ஆர்., ஷீட்டில் 75 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்கவேண்டும். மீதம் உள்ள 75 மதிப்பெண்களுக்கு விடைத்தாளில் பிற கேள்விகளுக்கு பதில் எழுதவேண்டும். 50 மதிப்பெண்கள் செய்முறை தேர்வுக்காக ஒதுக்கப்படுகிறது.கடந்த கல்வியாண்டுகளில், ஓ.எம்.ஆர்., ஷீட்டில் எச்.பி பென்சில் பயன்படுத்தி, ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான விடை, மாணவர்களால் தேர்வு செய்து நிரப்பப்பட்டு வந்தது. ஓ.எம்.ஆர்., கம்ப்யூட்டரில் நேரடியாக பதிவு செய்து மதிப்பெண் வழங்கும்பொழுது, பென்சிலில் நிரப்பப்படும் சில பதிவுகள் விடுபடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.இதனால், ஓ.எம்.ஆர்., ஷீட்டில் கருப்பு அல்லது நீல நிற 'பால் பாய்ன்ட் பேனா' பயன்படுத்த அரசு தேர்வுத்துறையால் அறிவுறுத்தப்பட்டது. தகவல்கள் அனைத்து மாணவர்களுக்கும் சென்று சேராத நிலையில், 'பால் பாய்ன்ட் பேனா' இல்லாத மாணவர்கள் பென்சில் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு, முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்க, அனைத்து முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு கடந்த 22ம் தேதி சுற்றறிக்கையின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு