Skip to main content

ஏப்., 23, காலை 11.00 மணிக்குள் இருக்கணும்; ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு உத்தரவு

திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட எட்டு சட்டசபை தொகுதிகளிலும் பணியாற்ற உள்ள, ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2,120 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், ஓட்டுப்பதிவு தலைமை அலுவலர் மற்றும் மூன்று ஓட்டுப்பதிவு அலுவலர்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 176 ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். ஓட்டுப்பதிவு அலுவலர்கள், வரும் ஏப்., 23ம் தேதி காலை 11.00 மணிக்கு, ஓட்டுச்சாவடிக்கு செல்ல வேண்டும். ஓட்டுச்சாவடியை சுற்றி, 200 மீட்டர் தூரத்தில், கட்சி சின்னங்களோ, கொடிக்கம்பங்களோ, விளம்பரங்களோ இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.ஓட்டுச்சாவடிக்கு வரும் பகுதிகள், வேட்பாளர் பெயர்களை, சுவற்றில் ஒட்டி வைக்க வேண்டும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். முன்னதாக, கட்சிகளின் பூத் ஏஜன்ட் நியமனம், இருக்கை ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளையும் செய்து முடிக்க வேண்டும். ஏப்., 24ம் தேதி காலை 6.00 மணிக்கு, பூத் ஏஜன்டுகள் முன்னிலையில், மாதிரி ஓட்டுப்பதிவு நடத்திப் பார்க்க வேண்டும். அதன்பின், காலை 7.00 முதல் மாலை 6.00 மணி வரை ஓட்டுப்பவு நடத்த வேண்டும். தேர்தல் கமிஷன் வழங்கும் படிவத்தில், பார்வையாளர்களிடம் குறிப்பு எழுதி பெற வேண்டும். இதேபோல், ஓட்டுப்பதிவு அலுவலர் 1, 2 மற்றும் 3 ஆகியோருக்கும் பல்வேறு பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு தொகுதியிலும், தேர்தல் பிரிவு அதிகாரிகளும், மண்டல அதிகாரிகளும் நேற்று ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
திருப்பூர் வடக்கு தொகுதிக்கு, நஞ்சப்பா பள்ளியிலும், தெற்கு தொகுதிக்கு, ஜெய்வாபாய் பள்ளியிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக, அவர்களுடைய தொகுதி மற்றும் வாக்காளர் பட்டியல் விவரங்களை பெற, படிவம் 12 மற்றும் 12ஏ ஆகிய படிவங்களை வழங்கி, பூர்த்தி செய்து பெற்றுக்கொண்டனர். அடுத்ததாக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டுப்பதிவு, "கன்ட்ரோல்' யூனிட்டை இயக்குவது குறித்து "பவர் பாயின்ட்' மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க, அவர்களை பற்றிய விவரம் பெற்று, போட்டோ எடுக்கப்பட்டது. அடுத்த பயிற்சியின் போது, கூடுதல் விவரங்கள் அறிவிக்கப்படும். இறுதி கூட்டத்தில், தபால் ஓட்டு பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா