Skip to main content

கலவரத்தில் உயிரிழக்கும் தேர்தல் அலுவலர்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு.

கலவரத்தில் பலியாகும் தேர்தல் அலுவலர்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலின் போது 
எதிர்பாராமல் நிகழும் கலவரங்கள், வெடிகுண்டு தாக்குதல்களில் தேர்தல் பணியில் ஈடுபடும்அலுவலர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்கமாநில அரசுகளை தேர்தல் ஆணையம்
வலியுறுத்தியுள்ளது.

வன்முறை சம்பவங்களால் கை,கால் உள்ளிட்ட உறுப்புகளை இழக்க நேரிட்டாலோ, கண் பார்வை பாதிக்கப்படாலோ ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான அறிக்கை மாநில தேர்தல் ஆணையர்கள், தலைமைச் செயலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் விதிமுறை அமலில் உள்ள நிலையில் அதிகாரிகள், அமைச்சர்கள் காணொலி காட்சி முறையில் கூட்டம் நடத்தக்கூடாது என்றும் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இயற்கை பேரழிவு உள்ளிட்ட தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் காணொலி மூலம் உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் இது தொடர்பான சி.டி தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா