Skip to main content

பிளஸ் 2 தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன. 26ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகின்றன.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 26ம் தேதி தொடங்க உள்ளது. குழப்பங்கள் ஏதும் இல்லாமல் தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வுத் துறை செய்து வருகிறது. பிளஸ் 2 தேர்வுகள் நாளையுடன் முடிகின்றன. இதையடுத்து 26ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகின்றன. ஏப்ரல்
9ம் தேதி தேர்வு முடியும். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ்நாடு புதுச்சேரியை சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பள்ளிகள் மூலம் சுமார் 10 லட்சம் மாணவ மாணவியர் எழுதுகின்றனர். அவர்களுக்காக 3 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கும். தேர்வு நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள், பெற்றோர், கல்வியாளர்கள் தரப்பில் கோரிக்கை வைத்தும் ஏற்கெனவே அறிவித்தபடி தேர்வுகள் குறித்த நேரத்தில் நடக்கும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து 26ம் தேதி தொடங்க உள்ள தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வுத்துறை செய்து வருகிறது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு