Skip to main content

10ம் வகுப்பு தமிழ் முதல்தாளில் எழுத்து பிழை: மாணவர்கள் அதிர்ச்சி

நேற்று நடந்த, பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாளில், எழுத்துப்பிழை இருந்ததால், மாணவர்கள் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்தனர். தமிழகத்தில், 10 வகுப்பு பொதுத்தேர்வு நேற்று நடந்தது. முதன்முதலாக பொதுத்தேர்வை சந்திக்கும் பதட்டத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு, முதல் தேர்விலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தமிழ் முதல்தாள் தேர்வில், 26வது கேள்வியாக கேட்கப்பட்ட, "வேந்தற்குரிய பொருள் யாது' என்ற கேள்வியில், "வேந்தர்க்குரிய' என அச்சிடப்பட்டிருந்தது. அதே போல், 49, இ கேள்வியில், "மீள் நோக்கும்' எனத்தொடங்கும் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல் என கேட்பதற்கு பதிலாக, "மீன் நோக்கும்' என அச்சிடப்பட்டிருந்தது. தமிழ் முதல்தாளில் இருந்த அச்சுப்பிழை காரணமாக, மாணவ, மாணவியர் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ் பாட ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
தமிழ் பாடத்தில் ஒரு எழுத்து மாறினாலும், அதன் பொருள் மாறிவிடும். மீள் நோக்கும் என்பதற்கு பதில், மீன் நோக்கும் என, கேள்வி கேட்கப்பட்டுள்ளதால், அதன் அர்த்தமும், பொருளுமே மாறிவிட்டது. பாடல் வரி மீள் நோக்கும் என தொடங்கும் என, மாணவர்களுக்கு தெரிந்திருந்தும், வினாத்தாளில் மீன் என கொடுக்கப்பட்டதால், அதை வைத்து சிலர் முழு பாடலையும், மீன் நோக்கும் என மாற்றி எழுதி வைத்துள்ளனர். முதன்முதலாய் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு கேள்விகளுக்கும், மாணவர்கள் மாற்றி எழுதியிருந்தாலும், மதிப்பெண் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். முதல் தேர்விலேயே, குழப்பம் ஏற்பட்டதால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா