Skip to main content

தொடக்கக்கல்வித்துறையில் விரைவில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு

இடைநிலை மற்றும் தகுதிவாய்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வும் இன்றைய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வுடன் நடத்தப்படும் என பெரிதும் ஆவலாக எதிபார்க்கப்பட்டது.இதுகுறித்து நமது பொதுச்செயலர் திருமிகு செ முத்துசாமிஅவர்கள் ஏற்கனவே தொடக்கக்கல்வி இயகுனரிடம் முறையிட்டது அனைவரும் அறிந்ததே,


இந்நிலையில் இன்று பட்டதாரி ஆசிரியர் பதவிஉயர்வு கலந்தாய்வு அறிவிக்கப்பட்டததை அடுத்து இயக்குனரகத்தை நமது பொதுச்செயலர் பொதுச்செயலர் திருமிகு செ முத்துசாமி தொடர்புகொண்டு அதுபற்றி விசாரித்ததில் இருக்கின்ற மொத்தமுள்ள பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களில் குறிப்பிட்ட விகிதாச்சாரத்திலேயே பதவிஉயர்வு மூலம் நிரப்பப்படவேண்டும் .மீதமுள்ளதை நேரடி நியமனத்திற்கு ஒதுக்கவேண்டும் என்ற அரசாணையைபின்பற்ற வேண்டிய காரணத்தினால் பதவிஉயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டிக காலிப்பணியிடங்களை ஒன்றிய வாரியாக கணக்கெடுக்கும் பணி முழு வீச்சில் இயக்குனரகத்தில நடைபெற்று வருவதாகவும்,அப்பணி ஓரிரு நாளில் முடிவடைந்தவுடன் மாவட்ட தொடக்ககல்வி அலுவலர்களுக்கு விவரம் அனுப்பப்பட்டு வெகு சில நாட்களில் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு கண்டிப்பாக நடத்தப்படும் என தெரிவித்தனர்.என கூறினார்
மேலும் பள்ளிக்கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் மாநில பதிவு மூப்பு என்பதால் மொத்தபட்டதாரி ஆசிரியர் காலி பணியிடத்தில் இத்தனை நேரடி நியமனத்திற்கு போக மீதம் பதவி உயர்வுக்கு என கண்டறிவது எளிது.எனவே அங்கு இன்று கலந்தய்வு நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு