Skip to main content

முதுநிலை பட்டதாரிகளுக்கு இன்று ஆன்லைன் கவுன்சலிங்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆன்லைன் மூலம் இன்று கவுன்சலிங் நடத்தி பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்
ப  ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு போட்டித் தேர்வு நடத்தியது. இதில், தேர்ச்சி பெற்ற 593 பேருக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அலுவலகங்களில் இன்று காலை 10 மணிக்கு  ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நடக்கிறது. தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரிகள் தாங்கள் விரும்பிய இடங்களை ஆன்லைன் மூலம் நேரடியாக தெரிவு செய்யலாம்.கவுன்சலிங் ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண் அடிப்படையில் நடத்தப்படும். முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான கவுன்சலிங்கும், பின்னர் வேறு மாவட்டங்களில் பணி புரிய விரும்புவோருக்கான கவுன்சலிங்கும் நடக்கும்.

தமிழ்ப்பாட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் தங்களின் முகவரியில் தெரிவித்துள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு ஹால்டிக்கெட், கல்விச் சான்று மற்றும் இதர சான்றுகளுடன் கலந்து கொள்ள வேண்டும். இது தவிர பள்ளிக் கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்களாக பணியாற்றியவர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங் நேற்று நடந்தது. பள்ளிக் கல்வி இணைய தளத்தில் நேரடியாக நடந்த இந்த பதவி உயர்வு கவுன்சலிங்கில் 145 பேர் உதவியாளர்களாக பதவி உயர்வு நியமன ஆணைகள் பெற்றனர்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு