Skip to main content

இடைநிலை ஆசிரியர்கள் இன்று விடுப்பு எடுத்து போராட்டம்

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் இன்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் இந்தப் போராட்டத்தில் 750 பேர் பங்கேற்கவுள்ளதாக தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாவட்டத் தலைவர் சி.அரிகிருஷ்ணன் தெரிவித்தார்.
பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேர்வுநிலை, சிறப்பு நிலைக்கு ஏற்றத் தர ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 25 மற்றும் 26-ம் தேதிகளில் மாநிலம் தழுவிய 2 நாள் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி அறிவித்திருந்தது.
அதன்படி, இடைநிலை ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை பள்ளியில் வகுப்பு எடுக்காமல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று தற்செயல் விடுப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன